More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஈரோட்டில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!
ஈரோட்டில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!
Jul 14
ஈரோட்டில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், மாவட்டத்தில் தற்போது 3 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.



ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலையில் வயது பேதமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் அதிகரித்து காணப்பட்டது. தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதார துறையினர், மாநகராட்சி ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வந்தன. மாவட்டத்தில் தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரம் ஆக இருந்த நிலையில், தொற்று அதிகரித்ததால் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.



இதன்படி, மாநகராட்சி பகுதியில் தினமும் 4 ஆயிரம் பேருக்கும், புறநகர் பகுதியில் 6 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்ததால் தொற்று ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பயனாக தற்போது மாவட்டத்தில் தொற்றின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது.



இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை 11 லட்சத்து 3 ஆயிரத்து 970 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதில் நேற்று மட்டும் 8 ஆயிரத்து 899 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் தற்போது 1,676 பேர் வீட்டு தனிமையில் கண்காணிப்பில் உள்ள நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 43 ஆக குறைந்து உள்ளது.



இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் தொற்றில் இருந்து 96 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். 1 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்காமல், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar15

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்

Jan28

பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்

Feb20

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை

Oct21

பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்ன

Apr29

குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக

Mar12

கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதி

May26

இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் “ரான்சம்வேர்&

Mar08

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே

Jan17

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல

Mar31

நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமை

Sep19

மியன்மார் தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகா

Mar30

கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில

May19

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்ந

Feb05

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க

Mar29

தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக