More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பதற்றமான வாக்குச் சாவடிகளில், வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிப்பு!
 பதற்றமான வாக்குச் சாவடிகளில், வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிப்பு!
Apr 02
பதற்றமான வாக்குச் சாவடிகளில், வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரீமிங் மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.



நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, தொகுதி வாரியாக காவல் துறையினர் மற்றும் நுண் பார்வையாளர்களை ஒதுக்கீடு செய்யும் பணி, நேற்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. உதகையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கூடலூர் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராகுல்திவாரி, காவல்துறை பார்வையாளர் ரஞ்சித்குமார் மிஸ்ரா, மாவட்ட எஸ்.பி., பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.



கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையினர், நுண் பார்வையாளர்கள் சுழற்சி முறையில் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றதாகவும், இதில் சுழற்சி முறையில் 400 காவல் துறையினர் மற்றும் 112 நுண் பார்வையாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாவும் கூறினார்.



மாவட்டத்தில் உள்ள 868 வாக்குச் சாவடிகளில், 112 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அங்கு வெப் ஸ்ட்ரீமிங் மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், மாவட்டத்தில் உள்ள 50 சதவீத வாக்குச்சாவடிளில் வெப் ஸ்ட்ரீமிங் மற்றும் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் எனவும் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May04

விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் கத்தாளப்பட்டியில் உள்ள

Apr24

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வை

Feb24

திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்

May20

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற

Jul15
Jan27

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா

Jan29

ஆட்கொல்லி கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு உலக நாடுகளைப

Jan19

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண

Jul30

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்

Dec28

டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச

May22

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள

Oct02

துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடு

Mar08

உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா

Dec27

நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குற

Jun07

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந