திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட தங்கக் கவசம் காணிக்கை!
உலகின் பணக்கார கடவுள் என்றால் திருப்பதி ஏழுமலையானை சொல்லலாம். பெரும்பாலும் பெரிய கோவில்கல் என்றாலும் விசேஷ நாட்களில் மட்டுமே அதகளவு பக்தர்கள், தரிசனத்திற்காகச் செல்வர். ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுவதுண்டு. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறிப்பிட்ட எண்னிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்றதை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவர். மேலும் ஒரு சிலர் வேண்டுதலின் பேரில் தங்க நகைகள், வைரம் , மாணிக்கம் பதித்த கிரீடம், வால் போன்றவற்றை காணிக்கையாக் கொடுப்பர். அப்படி தமிழகத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளார் ஒருவர் வைரம் மற்றும் மாணிக்கம் பதித்த கை கவசங்களை காணிக்கையாக வழங்கியிருக்கிறார். 5.3 கிலோ எடை கொண்ட அந்த கை கவசங்கள் 3 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த கவசங்களை நகைக்கடை உரிமையாளர் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் கூடுதல் செயல் அதிகாரியிடம் நேற்று வழங்கியிருக்கிறார். இந்த தங்கக் கவசங்கள் மிக முக்கிய உற்சவ நாட்களில் ஏழுமலையானுக்கு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.