More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? ஜனாதிபதி செயலணி!...
ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? ஜனாதிபதி செயலணி!...
Aug 27
ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? ஜனாதிபதி செயலணி!...

தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? அல்லது 30ம் திகதியுடன் தளர்த்துவதா? என்பது தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படவுள்ளது.



சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். கோவிட் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இன்றைய தினம் கூடி, இந்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



எவ்வாறாயினும், நாட்டில் பதிவாகின்ற கோவிட் தொற்றாளர்கள் மற்றும் பதிவாகின்ற கோவிட் மரணங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே, இன்றைய தினம் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



இதேவேளை, நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, 30ம் திகதிக்கு பின்னர் நீடிக்கும் சாத்தியம் கிடையாது என்பதே, தனது தனிப்பட்ட கருத்து என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்று தெரிவித்திருந்தார்.



பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே, நாடு இம்முறை முடக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். நாட்டை முடக்கி, முன்னோக்கி செல்வது சிரமமானது என்பதே, உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் கருத்தாகும். நாட்டை திறந்து வைத்த நிலையிலேயே, கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் இடத்திற்கு உலக நாடுகள் வந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.



இதனிடையே, தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என சுகாதார தரப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் அரசாங்கத்திடம் வலிறுயுத்தியுள்ளனர்.



எனினும், நாட்டை தொடர்ந்து முடக்காமல், ஏற்கனவே அறிவித்தபடி எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்குமாறு அரசின் மூத்த அமைச்சர்கள் பலர் அரச உயர்மட்டத்திடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug11

கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத

Sep26

மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உட

Jun09

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து 

இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணை

May12

காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற

Jul14

முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற

Oct21

கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட

Feb09

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக

Oct17

வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங

Sep20

பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர்

Apr06

கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும

Feb23

பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற

Jan25

இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொல

Apr10

விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரா

Feb02

எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நாட்டிலுள்ள சகல மதுபா