More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? ஜனாதிபதி செயலணி!...
ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? ஜனாதிபதி செயலணி!...
Aug 27
ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? ஜனாதிபதி செயலணி!...

தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? அல்லது 30ம் திகதியுடன் தளர்த்துவதா? என்பது தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படவுள்ளது.



சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். கோவிட் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இன்றைய தினம் கூடி, இந்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



எவ்வாறாயினும், நாட்டில் பதிவாகின்ற கோவிட் தொற்றாளர்கள் மற்றும் பதிவாகின்ற கோவிட் மரணங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே, இன்றைய தினம் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



இதேவேளை, நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, 30ம் திகதிக்கு பின்னர் நீடிக்கும் சாத்தியம் கிடையாது என்பதே, தனது தனிப்பட்ட கருத்து என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்று தெரிவித்திருந்தார்.



பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே, நாடு இம்முறை முடக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். நாட்டை முடக்கி, முன்னோக்கி செல்வது சிரமமானது என்பதே, உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் கருத்தாகும். நாட்டை திறந்து வைத்த நிலையிலேயே, கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் இடத்திற்கு உலக நாடுகள் வந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.



இதனிடையே, தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என சுகாதார தரப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் அரசாங்கத்திடம் வலிறுயுத்தியுள்ளனர்.



எனினும், நாட்டை தொடர்ந்து முடக்காமல், ஏற்கனவே அறிவித்தபடி எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்குமாறு அரசின் மூத்த அமைச்சர்கள் பலர் அரச உயர்மட்டத்திடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நாட்டிலுள்ள சகல மதுபா

Jan25

நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்

Oct14

நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இ

Aug09

எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு

May03

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக

Mar06

குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது ம

Mar17

36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப

Sep07

இலங்கையில் கடந்த மாதங்களாக நிலவிய அசாதாரண நிலை காரணமா

Oct13

ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்

Jun29

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்

Feb13

இலங்கை அரசாங்கம், பாகிஸ்தானுடன் மேலும் சில புரிந்த

Sep16

புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்

Jan26

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலா

Jun14

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படு

Mar06

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா