மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் இன்று துவங்கியது.
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மம்மூட்டி. கடந்த 2017ம் ஆண்டு இவரின் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘கஸாபா’. இந்த படத்தில் மம்மூட்டி பேசிய வசனங்கள் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த வசனத்தில் ஆணாதிக்கச் சிந்தனைகளும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களும் இடம்பெற்றன
இதனால் கேரளாவில் பெரிய பூகம்பமே வெடித்தது. இந்த வசனங்களை கண்டித்து நடிகை பார்வதி உள்ளிட்ட பலர் மம்மூட்டி எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பெண் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ‘புழு’ என்ற புதிய படத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளார். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து முதல்முறையாக நடிகை பார்வதி நடிக்கவுள்ளார். இதனால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தை துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மம்மூட்டி, பார்வதி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு துவங்கவுள்ளது.