More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மீட்புப் பணி தீவிரம்; ஆப்கனில் இருந்து தாயகம் திரும்பும் 107 இந்தியர்கள்!...
மீட்புப் பணி தீவிரம்; ஆப்கனில் இருந்து தாயகம் திரும்பும் 107 இந்தியர்கள்!...
Aug 22
மீட்புப் பணி தீவிரம்; ஆப்கனில் இருந்து தாயகம் திரும்பும் 107 இந்தியர்கள்!...

காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள் விமானத்தின் மூலம் தாயகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.



ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஆட்சியாக தலிபான்களின் ஆட்சி திகழ்ந்தது. இருண்ட காலம் என்றே அக்காலம் அழைக்கப்பட்டது. இதனால், தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்க அச்சப்படும் மக்கள் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். பிற நாடுகளும் தங்களது நாட்டு மக்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டு கொண்டு வருகின்றனர்.



அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்களும் சிறப்பு படை விமானங்கள் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். இன்று 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் காபூலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டு இருப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.



இதற்கு முன்னதாக காபூல் விமான நிலையத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். 150 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானத்தை தடுத்து நிறுத்திய தாலிபான்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஆவணங்களை சரிபார்த்ததோடு அவர்களை சிறைபிடித்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியர்களை மீட்கும் பணி தொடரும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

  உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ

Aug28

சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே

Mar11

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க

Mar15

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்

Feb24

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க

Dec28

பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் ம

May03

எதிர்கொண்டிருந்த நிலையில் தப்பியோடிய கைதி ஒருவரையும

Jul04

உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத

Apr30

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தமது நி

Mar29

ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு

Feb25

அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர

Mar06

ரஸ்ய படையினருடன் சண்டையிடுவதற்காக சுமார் 66ஆயிரம் உக்

Oct20

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர

Mar09

லெபனான் நாடு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிக மோசமான பொர

Jan29

அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, சீனாவு