திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தவர் பிஜுஸ் காந்தி பிஸ்வாஸ். இவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று திடீரென அறிவித்தார். மேலும் அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிஜுஸ் காந்தி, சொந்த காரணங்களால்தான் ராஜினாமா செய்வதாகவும், அதற்கான கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அனுப்பிவிட்டதாகவும் கூறியுள்ளார்.