More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு காலதாமதமாக ஊதியம் வழங்கினால் ஏற்பார்களா? ஐகோர்ட்டு கேள்வி!
வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு காலதாமதமாக ஊதியம் வழங்கினால் ஏற்பார்களா? ஐகோர்ட்டு கேள்வி!
Aug 12
வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு காலதாமதமாக ஊதியம் வழங்கினால் ஏற்பார்களா? ஐகோர்ட்டு கேள்வி!

நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான செல்வந்தர்கள் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளனர். அவர்களும், காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அவை நிலுவையில் இருந்து வருகின்றன.



இதில் சில வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதிகள், ‘வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களுக்கு ஏராளமானோர் நுழைவு வரி செலுத்தாமல், ஐகோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். அப்படி எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? அவற்றின் எண்கள் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.



அதற்கு அந்த அதிகாரி, ‘வணிக வரித்துறையில் ஆலந்தூர் உதவி கமிஷனராக உள்ளேன். என் அதிகாரத்துக்கு உட்பட்டதில் 2 வழக்குகள் மட்டுமே உள்ளன’என்றார். இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வக்கீலிடம் நீதிபதி கூறியதாவது:-



நுழைவு வரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 2019-ம் ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.



ஆனால், வரியை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக நிதி அமைச்சர்கூட வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிகாரிகள் ஒழுங்காக வரியை வசூலிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.



வரியை வசூலிக்காமல் இழுத்தடித்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டேன். அந்த உத்தரவின்படி அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?



வணிக வரித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசுக்கு வரவேண்டிய வருவாய் காலதாமதம் ஆகிறது.



ஆனால் அதிகாரிகளுக்கு மாதத்தின் கடைசி நாளில் அரசு சரியாக ஊதியம் வழங்குகிறது. சரியாக வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக்கொள்வார்களா? வரி வசூலிக்கும் பணியில் உள்ள அதிகாரிகள் முறையாக வரி வசூலிக்கவில்லை என்றால், அரசை நடத்த முடியாது. எனவே, சொகுசு கார் நுழைவு வரி தொடர்பான அனைத்து வழக்குகளின் விவரங்களையும் வணிக வரித்துறை ஆணையர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.



இவ்வாறு அவர் கூறினார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர

Feb15

ஒரு கல்லூரி மாணவியை பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத

May31

தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங

Jan19

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண

May24

தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்

Nov02

கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ

Jan29

விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்மு

May15

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தா

May23

கட்சி மாறுவதற்காக வேறொரு கட்சி தலைவரை ஒரு முறையாவது ந

Jun11

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது &lsquo

Apr12

கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல

Sep21

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளும

Aug22

வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொ

Mar12

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கடந்த ஆண்டே தொடங

Apr21

தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள