More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 9 கி.மீ. நடந்து சென்று மூதாட்டிக்கு உதவித்தொகை வழங்கும் தபால் ஊழியர்!
9 கி.மீ. நடந்து சென்று மூதாட்டிக்கு உதவித்தொகை வழங்கும் தபால் ஊழியர்!
Aug 07
9 கி.மீ. நடந்து சென்று மூதாட்டிக்கு உதவித்தொகை வழங்கும் தபால் ஊழியர்!

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான சின்ன மயிலாறில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது காரையாறு அணைக்கு மேலே இஞ்சுக்குழி பகுதியில் வசிக்கும் 104 வயதான மூதாட்டி குட்டியம்மாள் முதியோர் உதவித்தொகை கேட்டு மனு வழங்கினார். அவரது கோரிக்கையை ஏற்று முதியோர் உதவித்தொகை வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.



தொடர்ந்து குட்டியம்மாளுக்கு கடந்த 5 மாதங்களாக தமிழக அரசின் உதவித்தொகையை சின்ன மயிலாறு தபால் நிலைய ஊழியர் கிறிஸ்துராஜா(வயது55) நேரில் சென்று வழங்கி வருகிறார்.



சின்ன மயிலாறில் இருந்து இஞ்சுக்குழிக்கு செல்வதற்கு வனத்துறையின் அனுமதி பெற்று காரையாறு அணையை படகில் கடந்தும், பின்னர் அடர்ந்த வனப்பகுதி வழியாக சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டும்.



எனவே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் வனத்துறை அனுமதியுடன் கிறிஸ்துராஜா அதிகாலையிலேயே அரசின் உதவித்தொகையுடன் சின்ன மயிலாறில் இருந்து காரையாறு அணை மற்றும் வனப்பகுதி வழியாக இஞ்சுக்குழிக்கு பயணிக்கிறார். அங்கு குட்டியம்மாளிடம் உதவித்தொகையை நேரில் வழங்கி விட்டு மீண்டும் சின்ன மயிலாறுக்கு மாலையில் திரும்பி வருகிறார். மூதாட்டிக்கு உதவித்தொகை வழங்குவதற்காக, தபால் ஊழியர் விடா முயற்சியுடன் 9 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் பயணிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul14

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி

Jul21

நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட

Feb15

ஒரு கல்லூரி மாணவியை பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத

Jan01

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை

Mar09

இந்தியா கடந்த 1947 ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திரம் அடைந்தது. இ

Apr23

இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா த

Mar04

 உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை ப

Jun13

இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ம

Feb04

சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை

Sep04
Mar29

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80),

Sep06

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம

Sep26

கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா

Mar12

உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி

Feb24

 

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ