More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்; இன்று முதல் அமலாகிறது!
ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்; இன்று முதல் அமலாகிறது!
Aug 08
ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்; இன்று முதல் அமலாகிறது!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பாதிப்பு குறைவாக இருக்கும் போதே கட்டுக்குள் கொண்டு வருமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன் படி கோவை, சென்னை, திருப்பூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக பட்டுள்ளன.



இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்திலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி, அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் தேநீர் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவைகளுடன் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களும் காலை 6 மணி முதல் 5 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் இன்று முதல் அமல் படுத்தப் படுகின்றன.



சேலம் மாவட்டத்தில் ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமையில் செயல்பட அனுமதி இல்லை. பூ, பழம், காய்கறி உள்ளிட்ட கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. வாரச் சந்தைகள் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது.



 


 



 





வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb16

தினக்கூலி வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த 60 வயது முத

Jul27

கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப்

Aug17

கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை மந்திரியான வீணா ஜார்ஜ

Jul24

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்

Mar26

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்

Jul18

மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்

Mar13
May28

கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்பட

May18

நாகையில், திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி மாவட்ட

Jun30

கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போ

Feb24

 

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ

Oct13

இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட

May16

பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப

Feb04

சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் தொடர வேண்டும் என

Aug08

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ