More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இதனால்தான் ஆடியோ-வீடியோவை திடீரென்று நிறுத்திவிட்டாரா சசிகலா?
இதனால்தான் ஆடியோ-வீடியோவை திடீரென்று நிறுத்திவிட்டாரா  சசிகலா?
Aug 05
இதனால்தான் ஆடியோ-வீடியோவை திடீரென்று நிறுத்திவிட்டாரா சசிகலா?

அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்களிடம் பேசி அந்த ஆடியோவினை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். வீடியோவும் வெளியிட்டு வந்தார். இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



சசிகலாவால் அதிமுகவை ஒருபோதும் கைப்பற்ற முடியாது. அதிமுகவிற்குள் அவர் நுழையவே முடியாது என்று சொல்லி வந்தனர். ஆனால் ஓபிஎஸ் மட்டும் மவுனமாக இருந்து வந்தார். ஓபிஎஸ்ஸின் மவுனம் அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.



இந்த நிலையில் டெல்லியில் ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் இணைந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்னர், சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவாரா? என்ற கேள்விக்கு, சசிகலாவால் ஒருபோதும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்று தெரிவித்தார் ஓபிஎஸ். அவரின் இந்த அதிரடிக்கு பின்னர் சசிகலா அமைதியாக இருக்கிறார். அமமுகவை கலைத்துவிட்டு அதிமுகவில் இணையப்போகிறார் சசிகலா என்ற பேச்சுகள் இருந்த நிலையில், ஓபிஎஸ்சின் பேச்சினால் தொடர்ந்து ஆடியோ -வீடியோ வெளியிட்டு வந்த அவர், கடந்த ஒரு வாரமாக அமைதியாகவே இருக்கிறார்.



இந்த நிலையில் சசிகலா அதிமுகவிற்கு தலைமை ஏற்க முயற்சிப்பதை விட அமமுகவ்விற்கு தலைமையேற்று தொண்டர்களை சந்தித்து வரவேண்டும் என்பதையே விரும்புவதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.



ஓபிஎஸ்சும் கைவிரித்துவிட்டதால் அடுத்து சசிகலா ஒன்றைத்தான் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறார். அது பொதுச்செயலாளர் வழக்கு. அதிலும் பாதகமான தீர்ப்பு வந்துவிட்டால், மறுபடியும் அதிமுகவை கைப்பற்றி முயற்சிப்பது வீண். கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பின்னர் அதிமுக தொண்டர்களை சந்திப்பதாக சசிகலா சொல்லி வந்தார். அதற்கு முன்னோட்டமாக தான் பலரிடம் தொலைபேசியில் பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு வந்தார். அதிமுகவின் சசிகலா நுழைய முடியாது என்பதற்கு அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் விடாப்பிடியாக இருந்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் வழக்கும் பாதகமாக வந்த பின்னர், அதிமுகவில் முயற்சிப்பதை விட அமமுகவிற்கு தலைமை ஏற்று நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமமுகவினரை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்று அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.



 



 





வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr06

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில

Mar24

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக -அதிமு

Jul17

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச

Mar29

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா

May15

மிசோரம் மாநிலத்தில் கடந்த  24 மணி நேரத்தில் 201 பேருக்கு

Dec29

மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய

Jun21

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு,

Jul29

ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி

May15

இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்

Sep09

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா

Jun30

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு கல்வி ஆண்

Mar27

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பள்ளி

Jul19

மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச

May11

சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக  மாறியுள்

Dec27

நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குற