More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்காவில் 70 சதவீத பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!
அமெரிக்காவில் 70 சதவீத பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!
Aug 03
அமெரிக்காவில் 70 சதவீத பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.



அதன்பின் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்தார்.



தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்திய அவர் மக்கள் தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்.



மேலும் அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4-ந் தேதிக்குள் அமெரிக்காவில் தகுதி வாய்ந்தவர்கள் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோசாவது தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஜோ பைடன் அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வந்தது.

 



ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை ஜூலை 4-ந் தேதிக்குள் அடையவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்தும் இலக்கு நேற்று எட்டப்பட்டது. சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு ஜோ பைடன் நிர்வாகம் தனது இலக்கை அடைந்துள்ளது.



அமெரிக்காவில் தகுதி வாய்ந்த பெரியவர்களில் 60.6 சதவீதம் பேருக்கும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 49.7 சதவீதம் பேருக்கும் முழுமையாக தடுப்பூசி (இரண்டு டோஸ்) செலுத்தப்பட்டுள்ளது.



இதற்கிடையே தெற்கு, மத்திய மேற்கு இளைஞர்களிடம் தடுப்பூசி செலுத்தும் விகிதங்கள் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.



அமெரிக்காவில் தற்போது டெல்டா வகை மாறுபாட்டால் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. அங்கு நேற்று புதிதாக 56 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar26

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜ

Mar23

உக்ரைன் ரஷ்யா போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராண

Jan28

அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணி

Jul06

பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்தி

May27

மரிக்கா பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்

Jul21

மத்திய சீனாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட

Jan04

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹா

Feb02

இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன்

Mar17

சீனாவின் வுகான் நகரில் 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப

Mar04

உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின்

Mar23

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 28 வது நாளாக போர் தொடுத்து

Mar05

 ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் ஜபோரி ஜி

Oct04

பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள

Feb02

அமெரிக்காவில்  கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ்

May28

உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசிய