More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா? - மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா? - மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Aug 02
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா? - மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்

ஈழச்சொந்தங்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனக்கூறி, அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் மத்திய அரசு தனது முடிவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:



இலங்கையை ஆளும் சிங்கள பேரினவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, ஒரு பாரிய இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து நிர்க்கதியான நிலையில் ஈழச்சொந்தங்கள் நிற்கிறார்கள். அவர்கள் இந்த பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா என ஏக்கத்தோடும், தவிப்போடும் 10 கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய் தமிழகத்தை நாடி வருகையில், அவர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என கூறி மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அவமதித்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் பெரும் கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.



இந்திய நாடு நாடாவதற்கு முன்பிருந்தே இந்த நிலத்தை ஆண்ட பேரினத்தின் மக்களை ஆரியக்கூட்டம் ஆதிக்கம் செய்ய முற்படுவது வரலாற்றுப் பெருங்கொடுமையாகும். ஆகவே, ஈழச்சொந்தங்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனக்கூறி, அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் மத்திய அரசு தனது முடிவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். 



மேலும் தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டப்போராட்டமும், மத்திய அரசுக்கு அரசியல் நெருக்கடியும் கொடுக்கவேண்டும் என  தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb05

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க

May21

இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக

Jun15

தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையா

Dec30

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி

Oct20

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்

Jan24

சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில

May29

லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை,

Sep08

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பொரணி அரசு மேல் நி

Feb11

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்த

Aug22

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில

May06

காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகு

Feb13

நாய்களின் மோப்ப சக்தி நம்முடைய கற்பனைக்கு எட்டாத ஒன்ற

Apr14

அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி ம

Jul15