More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தென்னிலங்கையில் மீண்டும் போற்றப்படும் நீதிபதி இளஞ்செழியன்!
தென்னிலங்கையில் மீண்டும் போற்றப்படும் நீதிபதி இளஞ்செழியன்!
Jul 26
தென்னிலங்கையில் மீண்டும் போற்றப்படும் நீதிபதி இளஞ்செழியன்!

நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து தென்னிலங்கையில் மீண்டும் புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது. மனிதாபிமானமற்ற சமூகத்தில் மீண்டும் மீண்டும் பிரகாசிக்கப்படும் தமிழரான நீதிபதி இளஞ்செழியனின் மனிதநேயம் மாறியுள்ளது என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



யாழ்ப்பாணம் உயர் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட மாணிக்கவாசகம் இளஞ்செயழின் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவரது மெய்பாதுகாவலரான சரத் ஹேமசந்திர என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.



சரத் ஹேமசந்திர உயிரிழந்து 4 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் சிலாபத்தில் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.



உயிரிழந்த ஹேமசந்திரவின் கல்லறையில் விளக்கேற்றி, வழிப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குடும்பத்தாருடன் தானம் வழங்கவும் நீதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.



பொலிஸ் அத்தியட்சகர் உயிரிழந்த பின்னர் அவரது பிள்ளைகள் இரண்டினையும் தனது பிள்ளைகளாக கருதும் நீதிபதி, அவர்களின் கல்வி நடவடிக்கைகளு்ககு உதவி செய்து வருகின்றார்.



ஹேமசந்திர உயிரிழந்த தினத்தன்று அவரது மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அளவிற்கு உணர்ச்சிவசப்பட்ட மனிதநேயமிக்க நீதிபதி இளஞ்செழியன் தற்போது திருகோணமலை நீதிபதியாக செயற்படுகின்றார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.



இதேவேளை பேஸ்புக்கில் நீதிபதியை வாழ்த்தி தென்னிலங்கை சேர்ந்த பலரும் பதிவுகளை பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், உண்மையான மனிதன். கல்லறையில் வணங்கி விட்டு மாத்திரம் செல்லாமல்,



பொலிஸ் அதிகாரியின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் செயலுக்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். இலங்கை சிறந்த மனிதாபிமான உள்ள இந்த மனிதனுக்கு எங்கள் மரியாதை எப்போதும் உண்டு என பதிவிட்டுள்ளனர்.



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun16

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க

Sep26

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை

Sep19

தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ஆம் திகதி முதல் நேற்று வரை

Feb11

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்

May04

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை

Dec30

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்

Apr04

 ராஜபக்ச அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள்

Jun15

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப

Mar02

கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பய

Jan27

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்ற

Mar14

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் நாளை செவ்வாய

Mar09

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்

Feb17

வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் த

Oct25

நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு

May02

2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செ