More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவிலேயே முதலிடத்தில் சென்னை… தடுப்பூசி செலுத்தியதில் புதிய சாதனை!
இந்தியாவிலேயே முதலிடத்தில் சென்னை… தடுப்பூசி செலுத்தியதில் புதிய சாதனை!
Jul 20
இந்தியாவிலேயே முதலிடத்தில் சென்னை… தடுப்பூசி செலுத்தியதில் புதிய சாதனை!

2 தவணை தடுப்பூசிகளையும் அதிகமாக செலுத்தி கொண்டவர்களில் நாட்டிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளது.



இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் மாவட்ட வாரியாக தடுப்பூசி முகாம் இயங்கி வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் என ஐந்து பெருநகரங்களில்நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் தான் 2 தவணை தடுப்பூசிகளையும் அதிகமாக செலுத்தி கொண்டவர்கள் உள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் 11% நபர்கள் இரண்டாம் தவணை செலுத்தி கொண்ட நிலையில், பெங்களூருவில் 10%, டெல்லி, மும்பையில் தலா 7% ,ஐதராபாத்தில் 5% தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.



18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக பெங்களூரில் 64 சதவீதமும், சென்னையில் 43 சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் 45 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசி 91%, சென்னையில் 85% செலுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb16

 கே.எஃப்.ஜே ஜுவல்லரியின் நகை சேமிப்பு திட்டத்தில் சே

Mar08

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நட

Mar09

இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம ந

Mar20

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி

Oct02

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ்

Sep15

தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள

Jun18

மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண்

Jun25

டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்

Jun23

கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவ

Aug29

இந்திய  பிரதமர்  நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கட

Jan26

போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்ப

May01

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர

May16

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்க

Mar16

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்

Feb25

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை