மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தலைமையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கலந்து கொண்டு பல நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், உழவர் பாதுகாப்பு திட்டத்தை விரிவுப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் வருவாய் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அவை விரைவில் நிரப்பப்படும். அங்கீகாரம் இல்லாத அங்கீகாரம் இல்லாத மனைகளில் வசிப்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் சிக்கல் நிலவி வருவதால் மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்றார்.
முன்னதாக கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆயிரக்கணக்கான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

