பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட வல்லுநர்கள் இதை தெரிவித்துள்ள நிலையில் அவரது உறுப்புரிமையை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல முடியாது என்றும் கூறினார்.
நாட்டில் தேசிய பொருளாதாரம், ஜனநாயகக் கொள்கை ஆகியவை பாதிப்புக்குள்ளாக்கியுள்ள நிலையில் நாட்டின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
இவ்வாறு குடும்ப ஆட்சி தொடர்ந்தால் நாட்டு மக்களின் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்