More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பருத்தித்துறையில்7 கொரோனா தொற்றாளர்கள் தலைமறைவு!
பருத்தித்துறையில்7 கொரோனா தொற்றாளர்கள் தலைமறைவு!
Jul 17
பருத்தித்துறையில்7 கொரோனா தொற்றாளர்கள் தலைமறைவு!

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்தகர்களுக்கு தொற்று உள்ளமை நேற்றைய பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களில் 6 பேர் தலைமறைவாகியுள்ளனர்.



அவர்கள் அனைவரும் புத்தளம் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் காவற்துறையினர் ஊடாக அவர்களைக் கைது செய்ய சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று வெள்ளிக்கிழமை கண்டறிப்பட்டுள்ளது.பருத்தித்துறை நகர் முடக்கப்பட்டு வங்கிகள் மட்டும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.



அதனையடுத்து தொற்றாளர்களை அடையாளம் கண்டு கொவிட்-19 இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்ட போது 6 வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர்.



அவர்கள் 6 பேரும் பிசிஆர் மாதிரிகளை வழங்கிய நிலையில் தமது சொந்த ஊரான புத்தளம் மற்றும் காத்தான்குடிக்கு சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன், அவர்களிடன் பணியாற்றியவர்களை சுயதனிமைப்படுத்த சென்ற போது அவர்களும் தலைமறைவாகியுள்ளதால் காவற்துறையினரின் உதவியை சுகாதாரத் துறையினர் நாடியுள்ளனர்.



இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு குறைந்தது ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த

Jan20

கொரோனா தொற்று உறுதியான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசே

Sep24

கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா

Jun18

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக

Mar01

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்

Sep24

பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய

Jul14

முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற

Feb03

கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289

Sep14

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம

Jan01

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் இந்தியாவுக்கு வ

Sep21

ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர

Sep08

தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம

Mar12

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம

Oct18

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர்

Dec12

நாட்டின் சில பிரதேசங்களில் 8 மணித்தியாலங்களுக்கு நீர்