More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கூட்டணிக்குள் உள்ள முரண்பாடுகளுக்கு பிரதமர் விரைவில் தீர்வு காணவேண்டும் - வாசுதேவ நாணயக்கார
கூட்டணிக்குள் உள்ள முரண்பாடுகளுக்கு பிரதமர் விரைவில் தீர்வு காணவேண்டும் - வாசுதேவ நாணயக்கார
Jul 04
கூட்டணிக்குள் உள்ள முரண்பாடுகளுக்கு பிரதமர் விரைவில் தீர்வு காணவேண்டும் - வாசுதேவ நாணயக்கார

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரைவில் தீர்வு காண வேண்டும். பங்காளி கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்பாட்டை பகிரங்கப்படுத்தியுள்ளது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.



  அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்து தேர்தலில் போட்டியிட்டோம். அனைத்து  தரப்பினரது ஒன்றிணைவை கருத்திற் கொண்டே நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும்  கூட்டணியின் பலத்தை கருதியே மக்கள்  மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கினார்கள்.



பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் பங்காளி கட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் தொடர்ச்சியாக புறக்கணக்கப்படுகிறார்கள். கடந்த காலங்களில் அரசாங்கம் கொள்கைக்கு முரணான செயற்பட்ட போது அதனை பங்காளி கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டினோம்.  கூட்டணியமைத்துள்ளோம் என்ற காரணத்தினால் தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.



 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜனபெரமுன கூட்டணிக்கும் இடையிலான முரண்பாட்டுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரையில் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.  தீர்மானம் எடுப்பது காலதாமதமாகுவது  கூட்டணியை மேலும் பலவீனப்படுத்தும்.



 பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டணி குறித்து குறிப்பிடும் கருத்துக்கள்   அரசாங்கத்தில் காணப்படும் பிரச்சினைகளை பகிரங்கப்படுத்தியுள்ளது. இவ்வாறான  கருத்துக்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும். கூட்டணியின்  முரண்பாடுகள்  தீவிரமடைந்தால் அது அரசாங்கத்தை முழுமையாக பாதிக்கும் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந

Jun27

நாட்டில் இன்று(27) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம ச

Apr10

இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று வெளிந

Jun14

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ

Apr02

பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே யாழில் இடம்பெற்ற ஐக

Feb02

களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழ

Sep26

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்

Sep30

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற

Mar17

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ந

Feb07

காலி - கோணபினுவல பிரதேசத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்த

Jan27

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக ந

Feb12

பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர

Aug29

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன

Jun06

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிர

Jan27

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய