More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வக்கீல்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வலியுறுத்தல்!
வக்கீல்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வலியுறுத்தல்!
Jun 27
வக்கீல்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வலியுறுத்தல்!

சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், ‘சட்டத்திலும், நீதிமுறைமையிலும் உள்ள முரண்பாடுகள்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை காணொலி வாயிலாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா வெளியிட்டார்.



பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் பேசியபோது, ஐகோர்ட்டு நீதிபதிகள் சமீபத்தில் பங்கேற்ற இருநாள் மாநாட்டில், காணொலி வாயிலாக நடத்தப்படும் விசாரணைகளில் உள்ள இணையப் பயன்பாடு சிக்கல்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.



கிராமப்புறங்கள், பழங்குடியினர் வசிக்கும் தொலைதூர மலைப்பாங்கான பகுதிகளில் இணையப் பயன்பாட்டில் உள்ள குறைபாடு, நீதி, நிர்வாக முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஆயிரக்கணக்கான இளம் வக்கீல்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கிறது என கவலை வெளியிட்டார்.



இணையப் பயன்பாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களையவும், கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து நிதியுதவியை எதிர்நோக்கியுள்ள வக்கீல்களுக்கு உதவவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய சட்டத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



வக்கீல்களையும், அவர்களிடத்தில் பணியாற்றுபவர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, இதுதொடர்பாக மத்திய சுகாதார மந்திரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun14

உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கொரோனாவால

Mar03

இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக

Jul01

டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச

Sep22

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட

Apr17

நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட

Jul22