More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தடுப்பூசி ஏற்றும் பணிகள் கடந்த ஜூன் 28 ஆம் திகதி முதல் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன!
 தடுப்பூசி ஏற்றும் பணிகள் கடந்த ஜூன் 28 ஆம் திகதி முதல் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன!
Jul 01
தடுப்பூசி ஏற்றும் பணிகள் கடந்த ஜூன் 28 ஆம் திகதி முதல் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன!

யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆரம்பத்திலும் கொரோனா நோய்க்கு எதிரான சினோபார்ம் முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றன.



இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் கடந்த ஜூன் 28 ஆம் திகதி முதல் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.



இதன்படி கடந்த 28 ஆம் திகதி 10,110 பேருக்கும் 29 ஆம் திகதி 13,182 பேருக்கும் 29 ஆம் திகதி 10,090 பேருக்கும் ஆக மொத்தம் 33,382 பேருக்கு யாழ். மாவட்டத்தில் 2 வது தடுப்பூசி போட்டப்பட்டுள்ளது.



இந்நிலையில் தொடர்ந்து ஜூலை 01 ஆம் 02 ஆம் திகதிகளிலும் சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையங்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெறும். இந்த 5 நாட்களிலும் 2 வது தடுப்பூசியினை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி சனிக்கிழமை அந்தந்த பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் காலை 8 மணி முதல் தடுப்பூசி வழங்கப்படும்.



தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி யாழ். போதனா வைத்திய சாலையிலும் தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார வைத்திய சாலைகளிலும் வழங்கப்பட்டிருந்தது.



இவர்களுக்கான 2 வது தடுப்பூசி ஜூலை 03 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் இதே வைத்தியசாலைகளில் வழங்கப்படும். எனவே தவறாது குறிக்கப்பட்ட இந்த தினத்தில் சமூகமளித்து உங்களுக்கான 2 வது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

இலங்கையின் சுதந்திர தினமான  எதிர்வரும் நான்காம் திக

Feb09

நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு

Feb14

யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண

Sep17

உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால்இ உணவகங்க

Sep20

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தம

Jul29

தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி

Apr27

சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் த

Jul22

வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம

Sep23

நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷா தயாரிப்புகளில்

Jul11

கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவி

Nov17

மண்சரிவு அவதானம் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்ட

Mar06

கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ

Jan29

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின

Aug03

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இல

Apr10

விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரா