More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபருக்கு சிறை!
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபருக்கு சிறை!
Jun 30
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபருக்கு சிறை!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா.



இவர் தனது 9 ஆண்டு கால பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.



ஜேக்கப் ஜூமா தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்த போதும் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அவரை பதவி விலக வலியுறுத்தியது‌.



இதையடுத்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டு ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் வழக்குகளை பல மாதங்களாக விசாரித்து வருகிறது.



இந்த சூழலில் ஊழல் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி ஜேக்கப் ஜூமாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜேக்கப் ஜூமா கோர்ட்டை அவமதித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.



இந்த நிலையில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் மீதான இறுதி விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது‌. அப்போது ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07

ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரில் ரஷ்யாவின் உயர

Sep17

விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வர்த்தக ரீதியான முதல்

Mar23

சிறுநீர் தொற்று என்று சிகிச்சைக்கு வந்த பெண்ணின் சிறு

Mar10

இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெர

Apr08

உக்ரைன் நாட்டை மிக விரைவாக கைப்பற்றி, கீவ் தலைநகரை மிக

Apr25

இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவ

Feb22

உக்ரைன் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் அதிகரித்துள்

Jun13

சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போ

Jan31

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நக

Mar26

அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படு

Oct02

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் இந்திய வம்ச

Jul31

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Jan12

 தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர

Mar28

ரஷ்ய வீரர்கள் பலரை உக்ரைன் படையினர் பிடித்து வைத்துள்

Mar11

இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன