More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தடுப்பூசி சாதனையின் பின்னால் கிராமப்புற மக்கள் - மத்திய அரசு தகவல்!
தடுப்பூசி சாதனையின் பின்னால் கிராமப்புற மக்கள் - மத்திய அரசு தகவல்!
Jun 23
தடுப்பூசி சாதனையின் பின்னால் கிராமப்புற மக்கள் - மத்திய அரசு தகவல்!

கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. முதலில் தடுப்பூசியின் மீது மக்கள் தயக்கம் காட்டினாலும், இப்போது கொரோனாவுக்கு எதிரான ஒரே வலிமையான ஆயுதம் தடுப்பூசிதான் என புரிந்து கொண்டு, அதை செலுத்திக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.



அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் நாடு முழுவதும் 88.09 டோஸ் தடுப்பூசி போடப்பட்டன. இது உலக சாதனையாக அமைந்துள்ளது.



இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசியபோது கூறியதாவது:-



21-ந் தேதி ஒரே நாளில் தடுப்பூசியில் வரலாற்று மைல் கல்லாக 88.09 லட்சம் டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.



இதன் பின்னால் கிராமப்புற மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் 63.68 சதவீதம் பேர் இந்த சாதனையின்போது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நகர்ப்புற மக்கள் 36.32 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.



21-ந் தேதியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் என்று பார்த்தால் மத்திய பிரதேசம் முதல் இடம். அதைத் தொடர்ந்து கர்நாடகம், உத்தரபிரதேசம், பீகார், அரியானா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, மராட்டியம், அசாம் மாநில மக்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுள்ளனர்.



இன்று (நேற்று) பகல் 3 மணி வரையில் 29.16 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.



கொரோனா நிலைமை மேம்பட்டுள்ளது. அனாலும், கட்டுப்பாடுகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.



மே 7-ல் உச்சம் தொட்ட பின்னர் கிட்டத்தட்ட 90 சதவீத பாதிப்பு குறைந்து விட்டது.



இதுவரை நாட்டில் 22 பேருக்கு புதிய டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம், ரத்னகிரியிலும், ஜல்கானிலும் இந்த வைரஸ் பாதிப்பு 16 பேருக்கு ஏற்பட்டுள்ளது. 6 பேர் மத்திய பிரதேசத்திலும், கேரளாவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சத

Jul26

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம

Aug02

முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தன்னை நேரில் சந்தித்துப்

Jul14

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க

Apr19

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு

Oct23

இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண

Jul17

தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய

Jul14

தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின்

Feb11

பர்தா தொடர்பான மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்

Mar28

வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் சிறப்பு விருந

Jan21

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ

Jun12
Jun07

இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உ

Jan12

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத

Aug08

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ