More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிலிப்பைன்சில் கொரோனா தடுப்பூசி போட மறுத்தால் சிறை தண்டனை - அதிபர் எச்சரிக்கை!
பிலிப்பைன்சில் கொரோனா தடுப்பூசி போட மறுத்தால் சிறை தண்டனை - அதிபர் எச்சரிக்கை!
Jun 23
பிலிப்பைன்சில் கொரோனா தடுப்பூசி போட மறுத்தால் சிறை தண்டனை - அதிபர் எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சிறிய குற்றங்களுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்கிற சர்வாதிகார போக்கு மனம் உடையவர்.



அண்மையில் கூட கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி வீதிகளில் சுற்றித்திரியும் நபர்களை சுட்டுக்கொல்ல போலீசாருக்கும், ராணுவத்துக்கும் அனுமதி வழங்கி நாட்டு மக்களை கதி கலங்க வைத்தார்.



அதன் தொடர்ச்சியாக தற்போது நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.



பிலிப்பைன்சில் இதுவரை 13 லட்சத்து 67 ஆயிரத்து 894 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 23 ஆயிரத்து 809 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.



அங்கு கொரோனா வைரஸ் 2-வது அலை உருவாகும் அபாய சூழல் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.



ஆனால் 11 கோடி மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்சில் இதுவரை 21 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்த சூழலில்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை என்கிற அறிவிப்பை அதிபர் ரோட்ரிகோ துதர்தே வெளியிட்டுள்ளார்‌. தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறியதாவது:-



என்னை தவறாக எண்ணாதீர்கள். நாட்டில் ஒரு நெருக்கடி நிலவுகிறது. தேசிய அவசர நிலை உள்ளது. எனவே தடுப்பூசியா அல்லது சிறையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால் நான் உங்களை கைது செய்வேன். பின்னர் நானே உங்களுக்கு ஊசி போடுவேன். நீங்கள்‌ தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால் பிலிப்பைன்சை விட்டு வெளியேறுங்கள். இந்தியா அல்லது அமெரிக்கா எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் பிலிப்பைன்சில் இருந்தால் நீங்களே தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.‌



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov21

சோமாலிய பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அந்த நாட்டு தலைநகர்

Nov04

பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொட

Mar09

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Apr22

தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு

Mar25

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கொ

Mar02

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்ச

Jan20

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது த

Mar20

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் மூன்று ரஷ்ய

Feb24

இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுக

Sep25

ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்

Apr29

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உள்பட பல விஷயங்கள் குறித்து ர

Jun18

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து

Mar12

பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி

Jul31

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar16

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புக