More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சரத் பவார் வீட்டில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்.. அரசியல் சந்திப்பு இல்லையாம்
சரத் பவார் வீட்டில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்.. அரசியல் சந்திப்பு இல்லையாம்
Jun 23
சரத் பவார் வீட்டில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்.. அரசியல் சந்திப்பு இல்லையாம்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்று ஆம் ஆத்மி உள்பட 8 கட்சி தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இது அரசியல் சந்திப்பு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.



டெல்லியில் நேற்று முன்தினம் சரத் பவாரும், பிரசாந்த் கிஷோரும் சந்தித்து நீண்ட ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச தேர்தலிலும் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டு போராட்டத்தை ஆய்வு செய்ய, சரத் பவார் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் சார்பாக 22ம் தேதி (நேற்று) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பல எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நேற்றுமுன்தினம் அழைப்பு அனுப்பப்பட்டது.



திட்டமிட்டப்படி, நேற்று சரத் பவார் வீட்டில் எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேசிய மாநாடு ஆகிய 8 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தும் அந்த கட்சியிலிருந்து எந்தவொரு தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.



இந்த சந்திப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலோட்பால் பாசு கூறுகையில், இது ஒரு அரசியல் சந்திப்பு அல்ல. ஆனால் ஒத்த எண்ணம் கொண்டவர்களிடையே ஒரு தொடர்பு. கோவிட் மேலாண்மை, அரசு அமைப்புகள் மீதான தாக்குதல் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் கலந்து கொள்ளாதது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec20

பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந்

Nov02

கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ

Jul21
Feb04

மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு

Mar26

மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வ

Oct20

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்

Mar16

மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர்

Sep27

தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயி

Feb25

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த

Nov27

உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினர

Sep12

ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Jun22

நாட்டில் தொடர்ந்து 14-வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம்

Apr21

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொழில், வர்

Jan27

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா