More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியத் தூதுவர் எடுத்துரைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியத் தூதுவர் எடுத்துரைப்பு!
Jun 17
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியத் தூதுவர் எடுத்துரைப்பு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு இருக்கும்.”



இவ்வாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இன்று நேரில் உறுதியளித்தார் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையில் இன்று பகல் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே இந்தியத் தூதுவர் மேற்படி வாக்குறுதியை வழங்கினார்.



கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் இந்தத் திடீர் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சந்திப்பு நடத்த இருந்தது. இருப்பினும் அது இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், கொழும்பில் முகாமிட்டிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தியத் தூதுவருடனான இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.



வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, புதிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழ் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் இதன்போது பேசப்பட்டன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul10

மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீ

Jun22

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 ப

Jan25

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர

Jun02

கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குத

Oct22

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன

Oct04

எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற

Mar11

பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் க

Sep21

கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் த

Feb21

இலங்கைக்கு தேவையான எரிபொருளை ஏற்றிய 5 கப்பல்கள் எதிர்

Jan28

நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல்  ம

Jan24

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை,

May02

இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொது

Feb04

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழ

Apr19

மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்