More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பயணத் தடையை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்குக! – இலங்கை வைத்தியர் சங்கம் கடிதம்
பயணத் தடையை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்குக! – இலங்கை வைத்தியர் சங்கம் கடிதம்
Jun 13
பயணத் தடையை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்குக! – இலங்கை வைத்தியர் சங்கம் கடிதம்

இலங்கையில் மேலும் இரு வாரங்களுக்கு முழுநேரப் பயணக் கட்டுப்பாட்டை நீடிக்குமாறு இலங்கை வைத்தியர் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது. நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனாத் தொற்றாளர்கள் பதிவாகி வருவதையும் இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே வைத்தியர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.



தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21ஆம் திகதி நீக்கப்பட்டால், கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் என்றும் இலங்கை வைத்தியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.



நாட்டில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் வரை 14 ஆம் திகதிக்குப் (நாளை) பின்னர் மேலும் இரண்டு வாரங்களுக்குப் பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் வைத்தியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.



“பயணக் கட்டுப்பாடுகளின்போது செயற்படும் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதோடு, தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அத்தோடு பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம் சமூகத்தில் மறைந்துள்ள கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்” எனவும் இலங்கை வைத்தியர் சங்கம் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.



ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுக்கும், தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கும் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் புதிய தொற்றாளர்களை இனங்காண்பதற்கான வாய்ப்பு குறைக்கப்படுகின்றது” எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep20

நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா

Feb23

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொ

May02

சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ

Jul18

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ர

Jun28

இரத்தினபுரி மற்றும் மொனராகலை  மாவட்டங்களைச் சேர்ந்

Aug14

இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்

Jun09

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா

Feb03

சட்டவிரோதமாக 75 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியமை தொட

Sep23

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய

Mar26

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட

Jan26

கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில், பாடசாலை மாணவி

Jan30

உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவ

Mar14

பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வ

Jun07

இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறி

Jul17

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த