More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மலையக மக்களின் இருப்புக்கும் சமஷ்டி முறைமையே பாதுகாப்பு - கஜேந்திரன்
மலையக மக்களின் இருப்புக்கும் சமஷ்டி முறைமையே பாதுகாப்பு - கஜேந்திரன்
Jun 14
மலையக மக்களின் இருப்புக்கும் சமஷ்டி முறைமையே பாதுகாப்பு - கஜேந்திரன்

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறைமை வருகின்றபோது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்.



என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.



பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பகுதிகளில் உள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்று (13) முன்னெடுத்திருந்தது. இந்த நிவாரண ப் பொருட்களை வழங்கி வைத்ததன் பின் சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே கஜேந்திரன் . மேற்கண்டவாறு கூறினார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-



பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தோம். அதேபோல் மலையக மக்களுக்கான காணி மற்றும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம்.



இந்த நாட்டில் ஒற்றையாட்சி முறைமையை ஒழிக்கப்பட்டு சமஷ்டி முறைமையை உருவாக்கும் அரசமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே போராடி வருகின்றோம். அவ்வாறு சமஷ்டி முறைமை வருகின்றபோது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். மலையக மக்களுடன் இணைந்து பயணிக்க நாம் தயார்.



கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, சீனாவின் முகவர்களாகச் செயற்பட்டு நாட்டின் வளங்களை விற்கின்றது. பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு உயரும் வகையில் செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் பற்றி இந்த அரசு சிந்திப்பதில்லை. அவ்வாறு சிந்தித்திருந்தால் இவ்வாறு எரிபொருட்களின் விலை உயர்வடைந்திருக்காது.



செலன இணைந்த நிறுவன திட்டத்தின் ஊடாக கொழும்பிலுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை சீனாவுக்கு வழங்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தென்பகுதியைத் தாரைவார்ப்பது மட்டுமல்லாமல் வடக்கில் 7 ஏக்கர் காணியிலுள்ள ஜனாதிபதி மாளிகையும் குத்தகைக்கு வழங்க அரச தரப்பினர் முயற்படுகின்றனர்- என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul24

நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்த

May03

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம்  அர

Apr17

அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப

May20

பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி

May13

நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்க

Feb05

பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்

Jul27

கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்

Apr08

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்

Feb11

கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு

Apr11

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட

Jan19

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந

May09

கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய

Mar31

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்

Feb12

கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள

May28

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட கி