More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி -புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை!
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி -புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை!
May 28
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி -புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை!

வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே நேற்று முன்தினம் கரை கடந்தது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.



புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் 10-க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. மேலும் 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதேபோல் ஒடிசாவில் பாலசோர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.



இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக இன்று காலை விமானம் மூலம் மேற்கு வங்க மாநிலம் செல்கிறார். கலைகுண்டா விமானப்படை தளத்திற்கு செல்லும் பிரதமர் மோடியை பிரதமரை மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கார் வரவேற்கிறார். 



இதேபோல் கலைகுண்டா விமான தளத்தில் பிரதமரை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் சந்திக்க உள்ளார். அப்போது புயலால் ஏற்பட்ட சேத விவரம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் இருவரும் மாநிலத்தில் புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை தனித்தனியாக ஆய்வு செய்ய உள்ளனர்.



பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டபின்னர், பாதிப்பு குறித்து மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார். இதில் ஆளுநரும் பங்கேற்க உள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கை

Mar07

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங

Nov16

உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341

May23

தளர்வுகளற்ற பொதுமுடக்கம் நாளை அமலுக்கு வருவதையொட்டி,

Mar14

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

May29

லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை,

Mar23

இளைஞர் ஒருவர் வேலைமுடிந்து நள்ளிரவில் தினமும் 10 கி.மீற

Mar15

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை

Jun08

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப

Jun09

இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என அ

Jul02

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுக

Aug22

திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தவர்

Oct23

மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த

Sep06

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம

May26

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந