More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தொழிலாளியின் உடலை நடைபாதையில் வைத்து சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்!
தொழிலாளியின் உடலை நடைபாதையில் வைத்து சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்!
May 28
தொழிலாளியின் உடலை நடைபாதையில் வைத்து சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்!

பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். பின்னர் தொழிலாளியின் உடலை, அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்து தகனம் செய்ய முடிவு செய்தார்கள். இதையடுத்து, ஆஸ்பத்திரியில் இருந்து ஹெப்பால் மின்மயானத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தொழிலாளியின் உடலை, அவரது மனைவி கொண்டு சென்றார். மின்மயானம் அருகே வைத்து ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்க வேண்டும் என்று டிரைவர் கேட்டுள்ளார்.



ஆனால் தன்னிடம். ரூ.3 ஆயிரம் இருப்பதாகவும், மீதி பணத்தை யாரிடமாவது வாங்கி கொடுப்பதாகவும் தொழிலாளியின் மனைவி கூறியுள்ளார். இதனை ஏற்க ஆம்புலன்ஸ் டிரைவர் மறுத்ததுடன், தனக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தொழிலாளியின் உடலை மயானம் அருகே உள்ள நடைபாதையில் வைத்துவிட்டு டிரைவர் சென்றுவிட்டார். இதுபற்றி மயானம் அருகே இருந்தவர்களிடம் அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்று அம்ருததஹள்ளி போலீசார் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul14

மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக

Jun20
Jul05

உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்

Oct23

இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண

Apr25

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ

Feb04

மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு

Feb12

சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து வி

Mar16

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட

Jun29
Jan18

தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்

Feb22

 நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெ

Mar20

இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண

Dec19

கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 72 அரசு மற்றும் தனியார் பள்

Oct10

லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர

Oct05

நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட