More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நான்கு மணி நேரத்தில் கொழும்பு நகருக்குள் நுழைந்த 55,944 வாகனங்கள்!
நான்கு மணி நேரத்தில் கொழும்பு நகருக்குள் நுழைந்த 55,944 வாகனங்கள்!
Jun 01
நான்கு மணி நேரத்தில் கொழும்பு நகருக்குள் நுழைந்த 55,944 வாகனங்கள்!

சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகரிற்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையான காலப்பகுதியில் குறித்த வாகனங்கள் கொழும்பு நகரிற்குள் பிரவேசித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.



சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 20,440 வாகனங்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு சென்ற 7,000 வாகனங்கள், உணவு வழங்கும் 4,760 வாகனங்கள், நோயாளிகளைக் கொண்டு செல்லும் 8,232 வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான 8,232 வாகனங்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



எவ்வாறாயினும், பயணக் கட்டுப்பாடுகளை மீறி 3,528 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.



தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பயணக் கட்டுப்பாடுகளை மீறிய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.



மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் தொடர்பில் இன்றும் சோதனைகள் மேற்கொள்ளப்படும், அத்துடன், முன்னுரிமை பெற்ற அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் நபர்கள் மட்டுமே மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.



இதேவேளை, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உணவு விநியோக சேவைகளை விற்கும் வாகனங்கள் உப பாதைகளில் பயணிப்பதில்லை என்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்ந்தால் பிரதேச செயலாளர்களால் வழங்கப்படும் அத்தகைய விற்பனையாளர்களின் பயண அனுமதிகளை இரத்து செய்ய பொலிஸ்துறை நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar30

இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்ற

Jul27

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கி

Oct20

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசிய

Apr10

வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத

Feb18

ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி

Feb04

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்

Jul19

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய ம

Jun10

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்

Sep20

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர

Jun13

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று

Feb14

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின

Jul10

ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமை

Jan25

இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை

Jan18

பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட

Dec29

அரசமைப்பு பேரவையூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின