More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊர் மக்கள்!
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊர் மக்கள்!
May 23
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊர் மக்கள்!

மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுகளில் நீண்ட நாட்களாக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (22) மாலை அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் திருட முற்பட்ட போது அப்பகுதி இளைஞர்களினால் மடக்கி பிடிக்கப்பட்டார்.



குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக கோழிகள் திருட்டுப் போவதோடு, வீடுகளில் உள்ள துவிச்சக்கர வண்டிகள் உட்பட பெறுமதியான பொருட்கள் நாளாந்தம் திருட்டு போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

திருட்டுச் சம்பவத்துடன் ஈடுபடும் குறித்த இளைஞனை மன்னார் காவற்துறையினர் கைது செய்தாலும் உடனடியாக குறித்த நபரை விடுவித்து விடுவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.





இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை -மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருட முற்பட்ட போது அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து குறித்த திருட்டில் ஈடுபட்ட நபரை   பிடித்து கட்டி வைத்தனர்.



பின்னர் காவற்துறை அவசர தொலைபேசிக்கு 119 தொடர்பை ஏற்படுத்திய போது 2காவற்துறையினர் வருகை தந்தனர். பின்னர் குறித்த நபரை மன்னார் காவற்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவற்துறையினர் முறைப்பாடு செய்ய 4 பேரை மன்னார் காவல் நிலையத்திற்கு வருகை தர கோரி இருந்தனர்.

இந்த நிலையில் குறித்த  நபரை கைது செய்துகாவல் நிலையம் அழைத்துச் சென்று பின்னர் விடுவித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.





குறித்த பகுதிகளில் இரவு பகல் பாராது குறித்த இளைஞன் மற்றும் அவரது குழுவினரால் இப்பகுதியில் திருட்டுச் சம்பவம் இடம் பெற்று வருகின்ற போதும், குறித்த இளைஞன் பிடிக்கப்பட்டு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப் படுகின்ற போது காவற்துறையினர் குறித்த நபரை விடுவிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar18

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு

Aug13

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் ப

Mar11

பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் க

Jul14

காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதி

Mar09

நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிரு

Apr23

நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ

Feb18

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது மு

Sep30

யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11

Nov06

ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமா

Feb20

காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற

Feb11

நன்கொடை உண்டியலை உடைத்து அதில் இருந்த 1408 ரூபா பணத்தை கள

Oct18

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு

Apr30

60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்ப

Jan19

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்தி

Feb06

நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்