More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கடத்தி வரப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 8 பேர் கைது!
கடத்தி வரப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 8 பேர் கைது!
Apr 16
கடத்தி வரப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 8 பேர் கைது!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சாப், குஜராத் வழியாக போதைப்பொருள் கடத்தி கொண்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவத்தை தடுக்கும் நடவடிக்கையில் எல்லை பாதுகாப்பு படையினர் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து அரபிக்கடல் வழியாக இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு போதை பொருள் கடத்தி கொண்டுவரப்படுவதாக குஜராத் மாநில போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.



இந்த தகவலையடுத்து, அம்மாநிலத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து அரபிக்கடல் பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.



அப்போது, குஜராத்தின் ஜஹூவ் துறைமுகத்தில் இருந்து அரபிக்கடலில் 40 நாட்டிகல் மைல் தொலைவில் ஒரு படகு வருவதை கடலோரக்காவல் படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த படகை சுற்றிவளைத்த படையினர் அந்த படகை நடுக்கடலில் மறித்து ஆய்வு செய்தனர். மேலும், அந்த படகில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த படகில் 30 கிலோ அளவிற்கு ஹேராயின் என்ற போதைப்பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த படகு பாகிஸ்தானில் இருந்து வந்தது உறுதியானது. மேலும், பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த போதைப்பொருளை குஜராத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.



இதையடுத்து, அந்த போதைப்பொருள், படகை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த படகில் பயணித்த பாகிஸ்தானியர்கள் 8 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  



கைப்பற்றப்பட்ட 30 கிலோ போதைப்பொருளின் மதிப்பு 150 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar27

தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் க

Sep23

ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள

Mar08

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத

Mar07

 உலகம் : செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ்

Mar13

உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விர

Jan26

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்

Apr04

டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம

Mar28

உக்ரைனை இரண்டாக பிரிப்பது பற்றி ரஷ்யா ஆலோசித்து வருவத

Feb24

ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 'பாரிய பொருளாத

May04

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொரு

Mar24

உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி

Aug18

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அ

May20

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவ

May24

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Mar25

உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர