More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நிறுத்தணும். தவறினால் யாரும் நமக்கு உதவ முடியாது - கோவிட்-19 பணிக்குழு தலைவர்
நிறுத்தணும். தவறினால் யாரும் நமக்கு உதவ முடியாது - கோவிட்-19 பணிக்குழு தலைவர்
Apr 15
நிறுத்தணும். தவறினால் யாரும் நமக்கு உதவ முடியாது - கோவிட்-19 பணிக்குழு தலைவர்

அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவும் பின் யாரும் நமக்கு உதவ முடியாது என டாக்டர் என்.கே. அரோரா எச்சரிக்கை செய்துள்ளார்.



நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி.ஐ.) குழுவின் கோவிட்-19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:



நாம் பாா்பது என்னவென்றால், இளைஞர்கள் மிகவும் கவனக்குறைவாக உள்ளனர். சிறிய கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும், சமூக மற்றும் மத கூட்டங்கள், விவசாயிகள் போராட்டம் மற்றும் அரசியல் பேரணிகளை நாம் பார்த்தோம். இவை அனைத்தும் கோவிட்-19ஐ அதிவேகமாக பரப்பும் இடங்கள்.



இவற்றை நிறுத்தவில்லை என்றால், யாரும் நமக்கு உதவ முடியாது. இவை அனைத்தையும் பற்றி நாம் மிகவும் விமர்சிக்க வேண்டும். இறுதியாக, இவற்றை அரசியல் மற்றும் அதிகாரத்தை செயல்படுத்தும் அமைப்பின் ஆதரவுடன் செய்ய வேண்டும் என்று நான் சொல்வேன்.



நம்மிடம் கடந்த ஆண்டின் லாக்டவுன் அனுபவம் உள்ளது. இந்த நோயை எப்படி கட்டுப்படுத்துவது எப்படி என்பதை நாம் கற்றுக்கொண்டோம். லாக்டவுனுக்கு பிறகு நமது பொருளாதாரத்துக்கு எப்படி மீண்டும் ஊக்குவிப்பது என்பதையும் நாம் கற்றுக்கொண்டோம்.



தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தொடும்போது நாம் கடந்த கால அனுபவத்தை பயன்படுத்த வேண்டும். தொடர்புகளை குறைப்பதன் மூலம் மக்கள் இடையே கொரோனா பரவுவல் குறைப்பதை அடைய முடியும். ஒரு மாவட்டத்தின் ஒரு பகுதி போல் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நாம் லாக்டவுன் அமல்படுத்துவது அவசியம். உதாரணமாக மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் அங்கு 15 தினங்களுக்கு ஒரு பகுதி லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May27

வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத

Jun12

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 

நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும

Nov23

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையா

Mar20

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க

Apr21

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொழில், வர்

Aug18

கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி ந

Aug01

கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில

Apr17

நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட

Apr06

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில

Apr02

ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு

Apr20

கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங

Jul31

டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந

May06

சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப

May05

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வ