More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளா? தலைமை செயலாளர் திடீர் ஆலோசனை!
தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளா?  தலைமை செயலாளர் திடீர் ஆலோசனை!
Apr 15
தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளா? தலைமை செயலாளர் திடீர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாளொன்றுக்கு 5 முதல் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று புதிய கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது.



இவ்வாறு முதல் அலையை விட, கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவிக் கொண்டிருப்பதால் தமிழக சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



இதனிடையே, பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வண்ணம் கடந்த 8ம் தேதி புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மால்கள், தியேட்டர்கள், ஷோ ரூம்கள், கோவில்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, வார விடுமுறைகளில் கடற்கரைகளுக்கு செல்லத் தடை, ஹோட்டல்கள் மற்றும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு, திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் குறைந்தபட்ச நபர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த புதிய உத்தரவுகள் கடந்த 10ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையிலும், கொரோனா பாதிப்புகள் குறைந்ததாக இல்லை.



இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை நடத்தவிருக்கிறார். தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை எட்டியிருப்பதால் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆலோசிக்க நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar11

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப

Mar04

உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்த

Feb02

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப

Apr12

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரு

Sep27

தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயி

Aug12

மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங

Sep08

மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொ

Jul01

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்த

Aug14

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ

Jun27
Aug15

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின்

Sep23

குவாட் மற்றும் ஐநா மாநாட்டில் பங்கேற்க 4 நாள் சுற்றுப்

Feb24

திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்

Jul14

யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்ல

Jun24

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப்