More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது!
Apr 19
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத பூஜையையொட்டி கடந்த 10-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். மறுநாள் முதல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயா ஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை, களபாபிஷேக ஊர்வலம் போன்றவை நடைபெற்று வந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.



14-ந் தேதி விஷூ பண்டிகை அன்று சிறப்பு பூஜைகளுடன் கனி காணுதல் நடைபெற்றது. அப்போது, பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் வழங்கினர்.



கடந்த 8 நாட்கள் நடைபெற்று வந்த சிறப்பு பூஜைகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெற்றது. நேற்று இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.



வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை அடுத்த மாதம் (மே) 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 19-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.



கொரோனா காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை வெர்சுவல் கியூவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் வீதம் சாமி தரிசனம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழ்களுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr23

இலங்கை உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்

Jul26

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்ப

Sep20

சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்

Sep08

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பொரணி அரசு மேல் நி

Jan30

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று

Mar03

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண

Oct14

இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவ

Jun01

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ம

Jul20

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்

Jul29

ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி

Mar09

இந்தியா கடந்த 1947 ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திரம் அடைந்தது. இ

May18

 பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்

Jun15

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு

Jun27