More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சகலரும் ஒன்றிணையுங்கள் – நாட்டு மக்களிடம் ரணில் அறைகூவல்!
 சகலரும் ஒன்றிணையுங்கள் – நாட்டு மக்களிடம் ரணில் அறைகூவல்!
Apr 05
சகலரும் ஒன்றிணையுங்கள் – நாட்டு மக்களிடம் ரணில் அறைகூவல்!

அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கராஜ வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்சிபேதங்கள் இன்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். 



சிங்கராஜ வனத்தை பாதுகாக்க சர்வதேச மட்டத்திலான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.



நுகேகொடையில் ஞாயிறுக்கிழமை இளைஞர்களுடனான சந்திப்பின் போதே முன்னாள் பிரதமர் இதனைக் கூறினார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்,



சிங்கராஜ வனப்பகுதியில் நீர்தேக்கமொன்றை உருவாக்கி அதனூடாக அம்பாந்தோட்டை பிரதேசத்துக்கு நீர் வழங்க அரசாங்கம் முயற்சிக்கிறது.



இது வனப்பாதுகாப்பு சட்டத்துக்கு முரணானது.  தற்போது நடைமுறையில் உள்ள வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு அமைய சிங்கராஜ வனத்தில் ஒரு மரத்தை கூட வெட்டுவது கூட  சட்டவிரோத செயற்பாடாகும்.



கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து உலக நாடுகள் துரிதகர அபிவிருத்தி செயற்திட்டங்களை சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுத்துள்ளன .



ஆனால் அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக செயற்படுகிறது. சிங்கராஜ வனம் இலங்கையின் பிரதான மழைக்காடாக காணப்படுகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்க  முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர் ஜயவர்தன காலத்தில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.



சிங்கராஜ வனத்தின் நிலப்பகுதிகள் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சட்டவிரோத செயற்பாட்டை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.



சிங்கராஜ வனத்தை அழித்துக் கொண்டிருக்கும் அதேவேளை கொழும்பில்  மரக்கன்றுகளை நாட்டுவது பயனற்றது . சிங்கராஜ வனம் பாதிக்கப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.



சிங்கராஜ வனத்தை  பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் கட்சி பேதங்களை துறந்து ஒன்றினைய வேண்டும். சட்டத்திற்கு முரணாக செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து  செயற்பட வேண்டும்.



சிங்கராஜ வனத்தை பாதுகாக்க சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தற்போது செயற்படுத்தியுள்ளோம்.



அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்படுகிறது. சீனி வரிக்குறைப்பு மோசடி, தரமற்ற எண்ணெய் விநியோகம்  என பல குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளன. 



சீனி வரிக்குறைப்பு மோசடி, தரமற்ற எண்ணெய் இறக்குமதி ஆகியவற்றின் உண்மை தன்மையினை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.  அரசாங்கத்தின் கருத்துக்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன.



 துரித பொருளாதார முன்னேற்றம், சுற்றுசூழல் பாதுகாப்பு, சட்டவாட்சி கோட்பாடு ஆகிய துறைகள் குறித்து சிறந்த திட்டங்களை வகுத்துள்ளோம். கட்சியை பலப்படுத்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற எமது கொள்கைகளை நாட்டு மக்களுக்கு இனிவரும் காலங்களில் அறிவிப்போம் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep24

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட

Jun07

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக

Jan29

வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்

Feb24

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய

Jan24

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்

Apr08

சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க

Sep23

தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான ப

Apr07

ஐரோப்பாவுக்குத்  தப்பிச் செல்லும் நோக்கில் போலியான

Mar21

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிச

Jan12

திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.0

Jun17

ஒண்லைன் வகுப்புக்கள் மாணவர்களிற்கு பல்வேறு தாக்கங்க

Feb02

கொள்ளுபிட்டியில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தப்பட்டு

Feb09

மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப

Mar25

களுத்துறை தெற்கில் ரஷ்ய தம்பதியரின் பெருந்தொகையான வெ

Jan29

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின