More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை - விஞ்ஞானிகள் அழைப்பு
வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை - விஞ்ஞானிகள் அழைப்பு
Apr 09
வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை - விஞ்ஞானிகள் அழைப்பு

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை நடத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.



இன்றளவும் உலகுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிற கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகரில்தான் முதன்முதலாக தோன்றியதாக தகவல்கள் வெளிவந்தன.



உகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் கசியவிடப்பட்டதாகவும் கூறப்பட்டு வந்தது.



இந்த வைரஸ், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவுமையத்தின் தகவல்கள்படி, உலகின் 200 நாடுகளில் 13 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 903 பேரை நேற்று மதிய நிலவரப்படி தாக்கி இருக்கிறது. 28 லட்சத்து 87 ஆயிரத்து 909 பேரை கொன்றிருக்கிறது.



இந்த வைரசின் தோற்றம் குறித்து உலக சுகாதார நிபுணர்கள் உகான் நகருக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.



தவிரவும், ஆய்வுக்கூடத்துக்கு பதிலாக வன விலங்குகளிடம் இருந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.



இந்த நிலையில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் 24 பேர் ஒரே குடையின் கீழ் இணைந்து, கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி விரிவான புதிய விசாரணை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.



இது தொடர்பாக இந்த விஞ்ஞானிகள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறி இருப்பதாவது:-



கிடைக்கக்கூடிய சிறந்த வழிமுறைகளைக் கொண்டு கொரோனா தொற்றுநோயின் தோற்றம் குறித்து முழு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறோம். இது எந்தவொரு நாட்டின் மீதும் விரல்களை நீட்டும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை.



இந்த பேரழிவு எவ்வாறு தொடங்கியது என்பதை புரிந்து கொள்வதில் எந்தவிதமான முயற்சியையும் விட்டுவிடக் கூடாது என்பதுதான். எனவே அதற்கான முயற்சிகளுக்கு நாம் முன்னுரிமை அளிக்க முடியும். அனைத்து மக்கள் மற்றும் அனைத்து நாடுகளின் நலனுக்காக இதைச்செய்ய வேண்டும்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



இந்த கடிதம் எழுதுவதற்கு வழிநடத்திய அட்லாண்டிக் கவுன்சில் விஞ்ஞானி ஜேமி மெட்ஸில் இதுபற்றி கூறுகையில், “கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய இன்னும் விரிவான விசாரணைக்கு விடுக்கிற எங்களின் அழைப்பு, கொரோனா வைரஸ் குறித்த அதிக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளின் அவசியத்தை பிரதிபலிக்கிறது” என குறிப்பிட்டார்.



மேலும், இது சீனாவுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.



தொடர்ந்து அவர் கூறும்போது, “எதிர்காலத்தில் இதுபோன்ற மதிப்பாய்வுகளில் அமெரிக்க ஆய்வுக்கூடங்களும் இருக்க வேண்டும். இந்த தொற்று நோய் அவசரமானது. இந்த விரிவான விசாரணையை உடனே தொடங்க வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct11

அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா

Nov23

தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடு

Oct24

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந

May29

நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளத

Apr19

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.

Mar22

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு த

Sep06

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து

Feb23

நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவி

Sep28

நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்க

Jun09

பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான்

Jun14

உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்

Feb01

எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் மு

Aug19

ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏ

Apr21

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக

Apr03

மராட்டிய மாநிலம் நாக்பூர் மற்றும் மாநிலத்தின் சில இடங