More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தாராபுரத்திற்கு பிரதமர் மோடி நாளை வருகை!
தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தாராபுரத்திற்கு பிரதமர் மோடி நாளை வருகை!
Mar 29
தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தாராபுரத்திற்கு பிரதமர் மோடி நாளை வருகை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் தமிழக பா.ஜனதா தலைவா் எல்.முருகன் வேட்பாளராக போட்டியிடுகிறாா். அவரை ஆதாித்து பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அதற்கான பிரமாண்ட மேடை, பாா்வையாளா்கள் அரங்கம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதனை பாா்வையிட பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளரும், பா.ஜனதா தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி நேற்று தாராபுரம் வந்தார். பின்னர் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது



தாராபுரத்தில் 30-ந்தேதி (நாளை) காலை 11.30 மணிக்கு பிரதமா் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தமிழக முதல்-அமைச்சா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். கூட்டத்தில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளா் எல்.முருகன் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் 13 வேட்பாளா்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனா். இதில் கலந்து கொள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினா் திரண்டு வரவுள்ளனா்.



மத்தியில் பிரதமா் நரேந்திரமோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறாா். அதுபோன்று தமிழகத்தில் முதல்-அமைச்சா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் ஆகியோா் நல்லதொரு ஆட்சியை நடத்தி வருகின்றனா். தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது. அதுபோன்று தமிழக அரசும் விவசாய கடன் தள்ளுபடி, பொங்கல் பாிசு ரூ.2 ஆயிரத்து 500 என பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளது. இந்த சிறப்பான ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.



தாராபுரம் தொகுதியில் மக்களின் ஆதரவு 100 சதவீதம் எங்களுக்கு உள்ளது. அதுபோன்று தமிழ்நாட்டில்பிற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு 95 சதவீத வெற்றி வாய்ப்புஉள்ளது. ஏனென்றால் மக்கள் அராஜக தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்று முடிவு செய்துவிட்டாா்கள். அவா்கள் ஆட்சியில் கட்டபஞ்சாயத்து, நில அபகாிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை இப்படி பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. அவா்கள் மக்களுக்கு 11 முதல் 14 மணி நேர மின்தடையை கொடுத்தாா்கள். அதனால் மக்கள் அவா்களுக்கு நிரந்தர தடைகொடுத்துவிட்டாா்கள். இப்போது மக்கள் அனைத்து வசதிகளும் பெற்று கட்டபஞ்சாயத்து, நிலஅபகாிப்பு இன்றி நிம்மதியாக இருக்கிறாா்கள். எனவே தற்போது தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. நண்பன், தி.மு.க எதிாி. அதுபோன்று பா.ஜனதாவும் சாி, அ.தி.மு.க. வும் சாி எங்களிடம் குடும்ப அரசியல் கிடையாது, மக்களுக்கான அரசியல் மட்டுமே உள்ளது. எனவே இந்த தோ்தலிலும் மக்கள் எங்களை வெற்றிபெற செய்வாா்கள்.



இவ்வாறு அவர் கூறினார்.



பேட்டியின் போது பா.ஜனதா கட்சியின் கா்நாடக உள்துறை இணை மந்திரி பசுவராஜா, அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவா் பி.கே.ராஜ், பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவா் செந்தில்வேல், ஈரோடுவடக்கு மாவட்ட பொறுப்பாளா் செல்வகுமாா், மாவட்ட பொருளாளர் கொங்கு ரமேஷ், அ.தி.மு.க.மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிாிவு செயலாளா் ஆத்திக் உள்பட பலா் உடன் இருந்தனா்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug28

முதல்-அமைச்சர் 

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எட

Mar08

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ப

May20

அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்க

May09

ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மாமில்லப்பள

Apr02

 ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமைய

Sep15

தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக

May27

தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவியதன் காரணமாக கட

Apr08

டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க

Feb12

சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து வி

Mar14

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

Jul18

உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதே

Oct04

அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்

Jan20

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற

Jan31

வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா