More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொழும்பு கஜீமாவத பகுதிக்கு உதவுங்கள்-சமன் குமார்!
 கொழும்பு கஜீமாவத பகுதிக்கு உதவுங்கள்-சமன் குமார்!
Mar 17
கொழும்பு கஜீமாவத பகுதிக்கு உதவுங்கள்-சமன் குமார்!

கஜீமா தீ விபத்தில் தீக்கிரையாக்கப்பட்ட எளியவர்களின் வாழ்க்கையை அரசியலாக்காமல் அனைத்து கட்சிகளும் இணைந்து இத்தருணத்தில் மக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் சமன் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.



அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,



மாதம்பிட்டி கொழும்பு கஜீமாத்த தீ விபத்து திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் நடைபெற்றது. அதனை அடுத்து தீயணைப்பு படையினரின் உதவிகளால் தீப் பரவல் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுமார் 34 வீடுகள் முற்றாக சேதமடைந்தது அங்கு இருந்தவர்களின் சான்றிதழ்கள் பாடசாலை பிள்ளைகளின் புத்தகப்பை அவர்களது பிறப்பு சான்றிதழ்கள் ஆவணங்கள் அனைத்து உடைமைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.



இந்த தீப்பரவலின் பிறகு அவர்களுக்கு உண்ண உணவு உடுத்த உடை இருக்க இடம் இல்லாமல் தத்தளித்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவற்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் கிராமசேவகர் பிரதேச செயலாளர் மற்றும் அனைத்து அதிகாரிகளும் அந்த இடத்துக்கு வந்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தனர்.



எனவே தீக்கிரையாக்கப்பட்ட எளியவர்களின் வாழ்க்கையை அரசியல் ஆக்காமல் அனைத்து கட்சிகளும் இணைந்து இத்தருணத்தில் மக்களுக்கு என்ன உதவி செய்யலாம் என்பதையே கவனத்தில் கௌ்ள வேண்டும். பொய் வாக்குறுதிகளை தர வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.



கடந்த நல்லாட்சியில் வீட்டுத் திட்டத்தை நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொழும்பில் ஒரு அடிக்கல் கூட நடவில்லை என்பது வருத்தத்துக்கு உண்டான விடயமாகும். தொடர்ந்தும் எதிர்க்கட்சி எமது மக்களை ஏமாற்ற முடியாது . இனி வரும் காலங்களில் கொழும்பு வாழ் மக்கள் சிந்தித்து செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr02

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப

Feb08

அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும

Jun20

இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ

Jul06

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட

Feb01

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியம

May03

அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம

Jul08

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத

Jan01

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்

Apr14

ஆட்கடத்தலை கண்காணிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தி

Mar02

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக

Sep29

Aflatoxin  அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால், 

Mar09

நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிரு

Jan16

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுடன

Mar12

மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்

Jan28

குற்றம் ஒன்று நடந்திருந்தால், அதற்கான தண்டனையை குற்றவ