More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இறந்துபோன சம உரிமைகளையும் பெறுவதற்கான முயற்சி - சுரேன் ராகவன்
இறந்துபோன சம உரிமைகளையும் பெறுவதற்கான முயற்சி - சுரேன் ராகவன்
Mar 14
இறந்துபோன சம உரிமைகளையும் பெறுவதற்கான முயற்சி - சுரேன் ராகவன்

தமிழ்த்தேசம் இழந்துபோன ஜனநாயகத்தையும், இறந்துபோன சம உரிமைகளையும் பெறுவதற்கான முயற்சிகளை நாம் எடுக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும், சுதந்திர கட்சியின் வன்னி மாவட்ட தலைவருமான சுரேன் ராகவன் தெரிவித்தார்.



வவுனியா கந்தசுவாமி கோவிலுக்கு இன்று (13) விஜயம் மேற்கொண்ட அவர் விசேட பூஜை நிகழ்வுகளில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.



தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நான் வடமாகாண ஆளுனராக பதவி வகித்த 10 மாதங்களில் பத்தாயிரம் குடும்பங்களிற்கு அரச காணிகளை வழங்கியிருந்தேன். இராணுவத்திடம் இருந்த ஆயிரம் ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் கையளித்திருந்தேன்.

இதேவேளை கொழும்பில் இருக்கும் காணி ஆணையாளரிடமிருந்து கிடைக்கவேண்டிய ஒழுங்கான ஒத்துழைப்புக்கள் வலுவாக கிடைக்கவேண்டும் என்பதற்காகவே வடமாகாண காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதே தவிர வடமாகாணத்தை சேர்ந்த எந்த அதிகாரங்களும் பறிக்கப்படவில்லை பறிக்கப்படக்கூடாது, பறிக்கப்படமுடியாது.



தற்போது வன்னிக்கு நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழ் தேசத்திற்காக நான் செய்யவேண்டிய பணியை திரும்பவும் என்னிடம் இறைவன் வழங்கியதாகவே நினைக்கிறேன். வடமாகாணத்திலேயே குறிப்பாக விழுத்தப்பட்ட சமூகங்கள் வாழ்கின்ற வன்னியை முழுமையாக மாற்றியமைக்க என்னுடைய முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக மன்னார் மாவட்டம் காலம் காலமாக பின்தங்கிய பகுதியாக இருக்கிறது. அந்த நிலை மாறவேண்டும். 

நாட்டின் ஆழமான ஒரு ஜனநாயகத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டும்.



விசேடமாக தமிழ்தேசத்தில் இழந்து போன ஜனநாயகத்தையும், இறந்துபோன சம உரிமைகளையும் பெறுவதற்கான முயற்சிகளை நாம் எடுக்கவேண்டும். அதனை நான் ஆளுனராக இருந்து ஏற்கனவே செய்திருக்கின்றேன். எமது மக்களை ஜனநாயகத்தின் பாதையிலே நடாத்திச்செல்வதற்கான வழிமுறைகளை கூட்டுமுயற்சியாக செய்யவேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை. என்றார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar01

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்

May10

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்க

Jun09
Apr27

வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற

Mar18

முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர

Jun01

யாழ்ப்பாண  பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்ட

Feb04

பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப

Sep30

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி

Mar09

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ள

Oct05

மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.

Mar31

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ

Apr25

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா

Feb11

நன்கொடை உண்டியலை உடைத்து அதில் இருந்த 1408 ரூபா பணத்தை கள

Oct15

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத

Oct08

'குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் மு