More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா மரண அடக்கம் குறித்த புதிய ஒழுங்கு விதிகள் அடுத்த வாரம் வெளியீடு!
கொரோனா மரண அடக்கம் குறித்த புதிய ஒழுங்கு விதிகள் அடுத்த வாரம் வெளியீடு!
Feb 27
கொரோனா மரண அடக்கம் குறித்த புதிய ஒழுங்கு விதிகள் அடுத்த வாரம் வெளியீடு!

இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் அடங்கிய அறிவிப்பு அடுத்தவார முற்பகுதியில் வெளியிடப்படும் எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.



இலங்கையில் கொரோனாவால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாமை நீண்டகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் அதற்கான அனுமதி நேற்றுமுன்தினம் விசேட வர்த்தமானி மூலம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது.



இந்த வர்த்தமானியில் கொரோனாவால் மரணிப்பவரின் உடலைத் தகனம் அல்லது புதைக்க முடியும் என்பதுடன், மேலும் பல துணை உத்தரவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.



இந்தப் புதிய துணை உத்தரவுகளின்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய, அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சரீரங்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும்.



இதற்கமைய நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் வழங்கக்கூடிய உத்தரவுகளுக்கு ஏற்ப சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



இது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, அடுத்தவார முற்பகுதியில் புதிய ஒழுங்கு விதிகள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்படும் எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb03

மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்

Feb11

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா

Feb12

காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல

Sep19

மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி

Mar16

விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப

Apr02

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன

Apr17

அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப

Sep25

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Aug27

இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொ

Sep23

முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் த

Jun21

நாட்டில் கொரோனா வைரஸ் தரவுகளை மாற்றி அரசைக் கவிழ்க்கு

Jan26

கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில், பாடசாலை மாணவி

Mar14

தமிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு

Jan18

இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்ட

Sep24

ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந