More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை மீது மேற்குலக நாடுகளின் தலையீடுகளை அனுமதிக்க முடியாது – சீனா திட்டவட்டம்
இலங்கை மீது மேற்குலக நாடுகளின் தலையீடுகளை அனுமதிக்க முடியாது – சீனா திட்டவட்டம்
Feb 27
இலங்கை மீது மேற்குலக நாடுகளின் தலையீடுகளை அனுமதிக்க முடியாது – சீனா திட்டவட்டம்

மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள் சில இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது என சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீ தெரிவித்துள்ளார்.



இந்தச் செயற்பாடுகளை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இந்த விடயத்தில் இலங்கையின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாப்பதற்காக பூரண ஒத்துழைப்பை சீனா வழங்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீ கூறியுள்ளார்.



இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று சீன வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சீனாவும் இலங்கையும் நீண்ட கால நட்பின் கூட்டுறவு பங்காளிகள் என்றும், இந்த நட்பைத் தொடர்ந்தும் பேண வேண்டும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.



இதேவேளை, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு, மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சவால்களை சமாளிப்பதற்கும் சீனா தனது தன்னலமற்ற உதவிகளை வழங்கி வருகின்றது எனப் பதிலளித்து குறிப்பிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர், சீனாவின் இந்த ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.



அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள் பிரச்சினைகளை எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாமல், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து நெருக்கடிக்குள் தள்ளுகின்றன எனவும், இந்த விடயத்தில் சீனா தொடர்ந்து நீதியை நிலைநிறுத்தி வளரும் நாடுகளுடன் நிற்கும் என்று தாம் நம்புவதாகவும் தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep21

தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள

Jun08

 நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாடு காரணம

May08

நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச

Jun10

கெசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு ஸ்ரீலங்கா பொ

Dec31

பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அ

Jan27

லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா

Feb12

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ர

Aug14

இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்

Mar07

ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்

Jan25

அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுக

Aug26

நாடு தேசிய அனர்த்த நிலையினை எதிர்கொண்டுள்ளது. ஆகவே நா

Jan13

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ

Sep19

நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர  10 வருடங்கள் எடுக்கு

Jun16

இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து

May03

நிதியமைச்சர் பதவியை வகிப்பது எனக்கு இலகுவானதாக இருக்