More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உறுதியாக உள்ளது – ஜனாதிபதி
 புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உறுதியாக உள்ளது – ஜனாதிபதி
Feb 26
புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உறுதியாக உள்ளது – ஜனாதிபதி

உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உதவும் வகையில் ஒவ்வொரு துறையிலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உறுதியாக உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தில் வாக்குறுதியளித்ததைப் போலவே, இந்த நோக்கத்துடன் ஒரு தனி தொழில்நுட்ப அமைச்சை அரசாங்கம் நிறுவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



விஞ்ஞான, தொழில்நுட்பத்திற்கான அணிசேரா நாடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுகளின் 15 வது ஆளுநர் சபை கூட்டம் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.



தொழில்நுட்ப அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி ஆணைக்குழு ஏற்பாடு செய்த இந்த மாநாடு கொழும்பு மிலோதா நிதி கற்கைகள் நிறுவனத்தில் இடம்பெற்றது.



தொழில்நுட்ப அடிப்படையிலான பொருளாதாரம் கொண்ட நாடாக மாற, சுதேச தொழில்நுட்பம் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.



சூழல் நட்புடைய சுதேச மற்றும் பாரம்பரிய தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க வரலாறு எங்களிடம் உள்ளது. கொரோனா தொற்றுநோய் நிலைமைகள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கும், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் சுகாதாரத் துறையில் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திறனை நிரூபிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என ஜனாதிபதி கூறினார்.



இந்த மாநாட்டில் மூன்று தசாப்தங்களின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன், உறுப்பு நாடுகளுக்கு இடையில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்ளவும், அடுத்த பணியகக் கூட்டத்தை 2021 செப்டம்பரில் மொரீஷியஸில் நடத்தவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.



உறுப்பு நாடுகளுக்கு இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட அறிவின் அடிப்படையில் எழுதப்பட்ட ஐந்து புத்தகங்களும் வெளியிட்டு வைக்கப்பட்டன.



வெளிநாட்டு தூதுவர்கள், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் சம்பந்தப்பட்ட நாட்டின் அரச நிறுவனங்களின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ப

Sep30

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணித்தி

Feb01

இன்று காலை அம்பாறையின் தமண பகுதியிலுள்ள வீடொன்றில் தா

Mar25

களுத்துறை தெற்கில் ரஷ்ய தம்பதியரின் பெருந்தொகையான வெ

Jun10

வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப

Jan25

உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்ற

Oct21

வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியா

Apr02

நானுஓயா கிளாசோ கல்கந்தை மேல் பிரிவு தோட்ட அம்மன் ஆலயத

Sep30

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி

Feb04

இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட

Mar31

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்ச

Feb02

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ

Oct01

உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் தி

Mar18

காலி முகத்துவாரப் பகுதியில்  70 இலட்சம் ரூபா பெறுமதிய

Jan27

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்