More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஜெனிவா பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை
ஜெனிவா பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை
Mar 03
ஜெனிவா பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடனான தீர்வு விடயத்தில் இந்தியா மேலும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிவாவில் இந்த முறை முன்வைக்கப்படும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.



‘நல்லிணக்க செயன்முறை மற்றும் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகத் தமிழர்களின் தீர்வுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கையைக் கோருகின்றோம். இலங்கை ஒருமைப்பாடு பேணப்பட வேண்டிய அதே நேரத்தில், இலங்கைத் தமிழர்களின் கௌரவம், சம உரிமை என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு’ என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்திருந்தார்.



இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



“இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் இந்தியா கொண்டுள்ள நிலைப்பாட்டை மனதார வரவேற்கின்றோம்.



அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும், ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் நீதி, சமாதானம், சமத்துவம், கெளரவம் எனச் சகல உரிமைகளுடன் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதும் இந்தியாவின் நிலைப்பாடு.



இதை இலங்கை அரசுடனான பேச்சின்போது மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. தற்போது சர்வதேச அரங்கிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr19

மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆற

Mar12

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால்  தொடர் போ

Aug01

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண

Mar11

மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி

May11

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பத்தினர்

Mar12

மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்

Jul25

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு

Oct10

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள

Jun14

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ

Oct07

வடபகுதி  மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ

Feb23

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்

Jun22

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெ

Aug13

கொரோனா தொற்றினால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செ

Mar17

கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்

Feb04

இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு