More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, அங்கு தேயிலை தொழிலாளியாக மாறி வாக்காளர்களை கவர்ந்தார்!
அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, அங்கு தேயிலை தொழிலாளியாக மாறி வாக்காளர்களை கவர்ந்தார்!
Mar 03
அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, அங்கு தேயிலை தொழிலாளியாக மாறி வாக்காளர்களை கவர்ந்தார்!

பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரையில் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் நடக்கிறது.



இங்கு பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்குகிறது. அங்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.



இரண்டாவது நாளான நேற்று அவர் அப்பர் அசாம் பகுதியில் பிஸ்வநாத் சாரியாலி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு சென்றார்.



அங்கு அவர் தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அவர்களுடன் தானும் ஒரு தொழிலாளியாக மாறி தேயிலை பறித்தார்.



அந்த தொழிலாளர்களிடம் காங்கிரசுக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவரது எளிமை, வாக்காளர்களை கவர்ந்தது.





இதையொட்டி அவர்களிடம் பிரியங்கா காந்தி கூறியதாவது:-



தேயிலை தொழிலாளர்களும், அவர்களது வாழ்க்கையும் எளிமைக்கும், உண்மைக்கும் உதாரணம். நான் உங்கள் உரிமைகளுக்காக போராடுவேன். ஒவ்வொரு மன்றத்திலும் உங்களுக்காக குரல் கொடுப்பேன்.



தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அசாம் மற்றும் நாட்டின் சொத்துகள். காங்கிரஸ் கட்சி எப்போதுமே உங்களை காக்கவும், மேம்படுத்தவும் போராடும்.



இவ்வாறு அவர் கூறினார்.



அசாம் மாநில சட்டசபையின் 126 இடங்களில், குறைந்தது 40 இடங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்களும், அதிபர்களும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.



அங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கூலியை ரூ.167-ல் இருந்து ரூ.217 ஆக பா.ஜ.க. அரசு சமீபத்தில் உயர்த்தியது. ஆனால் அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கூலி ரூ.365 ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr04

தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சின

Jul25

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவர

Apr16

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப

Apr30

“இந்தியாவும், சீனாவும் பகையாளிகள் அல்ல கூட்டாளிகள்&rd

Mar31

நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமை

May16

பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப

Sep20

சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹா

Mar03

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை ச

Mar08

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உ

Feb24

தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் த

Feb02

பாம்பு பிடி மன்னரான வாவா சுரேஷ் பாம்பு பிடிக்கையில், ப

Mar29

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80),

Feb28

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி

Mar15

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருவண்

Jul03

திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த