More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் காவல்துறையினர் விசாரணை!
சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் காவல்துறையினர் விசாரணை!
Mar 02
சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் காவல்துறையினர் விசாரணை!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று காவல்துறை பிரிவுகளின் காவல்துறையினர் இன்றையதினம்(02) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய காவல்துறை பிரிவுகளின் காவல்துறையினர் இவ்வாறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



சிவசக்தி ஆனந்தனின் வவுனியாவில் உள்ள அலுவலகத்திற்குச் காலையில் சென்ற வவுனியா காவல்துறையினர் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் பங்கெடுத்தமை தொடர்பில் கேள்விகளைத் தொடுத்ததோடு நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகவும் சுட்டிக்காட்டினர்.



இதன்போது, தனது பெயர் குறிப்பிட்டு எவ்விதமான நீதிமன்ற உத்தரவுகள் வழங்கப்படவில்லை என்றும், தாம் நீதிமன்றத்தின் கட்டளைகளை மீறி நடக்கவில்லை என்றும் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை கோரி நிற்கையில் அரசியல் கட்சியின் பிரதிநிதியாக மக்களுடன் மக்களாக போராட்டத்தில் பங்கேற்றதாகவும் சிவசக்தி ஆனந்தன் பதிலளித்துள்ளார்.



அத்துடன், ஒன்றுக்கு மூன்று தடவைகள் இவ்வாறு விசாரணை என்ற பெயரில் தான் உள்ளிட்ட குறிப்பிட்ட ஒரு சில அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை இலக்குவைத்து காவல்துறையினர் செயற்படுவது தொடர்பிலும் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.



அதன்போது ‘மேலிடத்து உத்தரவு’ என்று காவல்துறையினர் பதிலளித்ததோடு அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களிடத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பதிலளித்துள்ளனர். இதேவேளை, வவுனியா காவல்துறையினரின் ஒருமணிநேர விசாரணைகளைத் தொடர்ந்து பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி தொடர்பில் ஒட்டிசுட்டான் காவல்துறையினரும் , புதுக்குடியிருப்பு காவல்துறையினரும்சிவசக்தி ஆனந்தனிடத்தில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்படத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep23

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்ய

Oct13

எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உ

Sep24

வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பிய

Mar11

மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி

Jan28

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்ற

Jan26

.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும

Jul01

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்க

Sep20

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்

Aug08

சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி

Mar12

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமு

Jun21

மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடய

Sep29

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாத

Jul06

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட

Apr17

வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தி

Feb02

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாள