More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இளம்பெண் மரண சர்ச்சையில் சிக்கிய மராட்டிய மந்திரி சஞ்சய் ரதோட் தனது மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்து உள்ளார்!
இளம்பெண் மரண சர்ச்சையில் சிக்கிய மராட்டிய மந்திரி சஞ்சய் ரதோட் தனது மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்து உள்ளார்!
Mar 01
இளம்பெண் மரண சர்ச்சையில் சிக்கிய மராட்டிய மந்திரி சஞ்சய் ரதோட் தனது மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்து உள்ளார்!

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பூஜா சவான்(வயது23). டிக்-டாக் பிரபலமான இவர், கடந்த மாதம் 8-ந் தேதி புனே ஹடாப்சரில் உள்ள கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.



இந்தநிலையில் இளம்பெண் மரணத்துக்கும், மாநில வனத்துறை மந்திரி சஞ்சய் ரதோட்டிற்கும் தொடர்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவின. மேலும் இதுதொடர்பான உரையாடல்கள், மந்திரியுடன் இளம்பெண் எடுத்துக்கொண்ட படங்களும் ‘வைரல்’ ஆகின.



இதையடுத்து சஞ்சய் ரதோட் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான பா.ஜனதா வலியுறுத்தியது.



மேலும் அந்த கட்சியினர் நேற்றுமுன்தினம் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல சஞ்சய் ரதோட்டின் மந்திரி பதவி பறிக்கப்படவில்லை எனில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த விடமாட்டோம் என பா.ஜனதா மிரட்டல் விடுத்து இருந்தது.



இந்தநிலையில் மந்திரி சஞ்சய் ரதோட் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த அவர், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக நிருபர்களிடம் கூறினார்.



அப்போது அவர் கூறியதாவது:-



இளம்பெண் பூஜா சவான் மரணத்தை வைத்து பெரிய அளவில் அழுக்கு அரசியல் செய்யப்படுகிறது. சுதந்திரமான, நியாயமான விசாரணை நடந்து உண்மை வெளியே வர வேண்டும் என்பதற்காக எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

தமிழக சட்டபேரவையில் மார்ச் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் ச

Mar15

தமிழகத்தில் 187 தொகுதிகளில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலி

Sep06

சட்டசபையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய

Mar30

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி

Sep14

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தர பிரதேச மாநிலம்

Apr05

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண

May16

கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந

Sep06

பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள

Sep12

நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முக

Apr27

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க

May15

இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்

Jan17

மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக

Jun27
Mar29

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020

Mar27

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பள்ளி