More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது!
மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது!
Feb 28
மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது!

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சில மாநிலங்களில் மட்டும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.



மராட்டியம், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து நோய் பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் மராட்டியம் மாநிலத்தில் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.



கடந்த ஒரு வார காலமாக அங்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில்தான் அதிக பாதிப்பு இருந்த நிலையில் இப்போது தொடர்ந்து நோய் பரவல் உயர்ந்து வருவதால், அதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மராட்டிய அரசு எடுத்து வருகிறது.



இதன்படி பல மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. விதர்பா பிராந்தியத்தில்தான் அதிக பாதிப்பு உள்ளது. அங்கு 5 மாவட்டங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.



அடுத்ததாக ஓட்டல்கள், மார்க்கெட்டுகள், மால்கள் ஆகியவற்றை மூடுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக மாநில மந்திரி விஜய் வேதித்துவார் கூறினார்.



மேலும் அவர் கூறும்போது, ‘‘ஏற்கனவே மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறோம். அடுத்ததாக மேலும் மக்கள் கூடம் இடங்களிலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர இருக்கிறோம். விடுதிகள், ஓட்டல்களின் செயல்பாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.



சாலைகளில் வாகன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் ரெயில்களின் எண்ணிக்கையையும் குறைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.



கல்வி மந்திரி உதய் சமந்த் கூறும்போது, ‘‘கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து இருப்பதால், கல்விதுறையிலும் பல நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். மாணவர்களின் பரீட்சைகளையும் ஆன்லைனில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது’’ என்று கூறினார்.



தற்போது அகோலா, அமராவதி, யவத்மால், புல்தானா, வாசிம் ஆகிய மாவட்டங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அகோலா மாவட்டத்தில் ஒரே நாளில் 1,364 பேரை நோய் பாதித்து இருக்கிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug17

மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்

Aug12

புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள

Sep06

பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள

Sep19

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ

Jan25

கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ

Jun10

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து <

Jan21

கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்து

May16

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்க

Feb05

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Feb14

இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத

May17

இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்க

Jan19

இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன

Feb02

இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ

Apr03

மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக

May27

தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவியதன் காரணமாக கட