More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்கா கடும் நடவடிக்கை? நாளை முக்கிய முடிவை அறிவிப்பதாக ஜோ பைடன் தகவல்
அமெரிக்கா கடும் நடவடிக்கை? நாளை முக்கிய முடிவை அறிவிப்பதாக ஜோ பைடன் தகவல்
Feb 28
அமெரிக்கா கடும் நடவடிக்கை? நாளை முக்கிய முடிவை அறிவிப்பதாக ஜோ பைடன் தகவல்

சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோகி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து கட்டுரை எழுதினார்.



அவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். ஜமால் கசோகி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்கு சென்றபோது அவர் கொடூரமாக உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.



இக்கொலைக்கு சவுதி அரேபியா இளவரசர் முக மதுபின் சல்மான் உத்தரவிட்டார் என்று துருக்கி குற்றம் சாட்டியது. மேலும் ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது.



இந்த நிலையில் ஜமால் கசோகி கொலை தொடர்பாக அமெரிக்க புலனாய்வு துறை வெளியிட்ட அறிக்கையில், சவுதி பட்டத்து இளவரசரின் ஒப்புதலோடுதான் இந்த கொலை நடந்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.



இந்த நிலையில் ஜமால் சசோகி கொலையில் சவுதி இளவரசருக்கும் தொடர்பு இருப்பது பற்றி அமெரிக்க புலனாய்வுதுறை வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.



நேற்று முன்தினம் சவுதி அரேபியாவை சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்கா, விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது சவுதி அரேபியா விவகாரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்து உள்ளதால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

இணைய வழித் தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பதால் அமெரி

May25

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாட

Mar09

ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்

Mar30

மறைந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலிக்கு இறுதி அஞ்ச

Jan26

அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட

Apr28

இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை வ

Mar24

உக்ரைனுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்பும் போலந்து ய

Jul14

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  இன்று ஆ

Jun18

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Aug16

ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களாக தலிபான்கள் தங்கள

Mar14

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Mar25

முதன் முறையாக ஜெர்மனியில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்

Sep06

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு

Feb08

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா

Mar29

ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு